வீட்டில் நிம்மதியாக வாழ பரிகாரம்

nimathiyaga vazha
- Advertisement -

வீடு என்றாலே அதில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்க வேண்டும். வெளியில் நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்குள் வரும் பொழுது ஒரு மன நிறைவும் நிம்மதியும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வெளியில் செல்லும் யாராக இருந்தாலும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். சென்றாலே சண்டை பிரச்சனை என்றால் வீட்டிற்கு வரவேண்டும் என்று எண்ணமே தோன்றாது.

நாமும் நமக்குத் தெரிந்தவர்கள் வீடு, சொந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வோம். அந்த வீட்டிற்குள் நுழையும் போதே மனதிற்கு ஒரு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். அப்படி இருக்கும் வீடு தான் தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாக இருக்கும். அது இல்லாமல் வீட்டிற்குள் வந்தாலே ஏதோ ஒரு இறுக்கமான மனநிலை போவது போல உணர்ந்தால் அங்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். அது கண் திருஷ்டி, பிறரின் தீய செயல்கள், நம்முடைய கெட்ட நேரம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

- Advertisement -

எப்படி இருப்பினும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஏனென்றால் வீடு என்பது வெறும் வீடாகாது அது வாழ்விடம் அப்படியான வாழ்விடத்தை நல்ல முறையில் வாழும் இடமாக மாற்ற பல எளிய தாந்த்ரீக முறைகள் உள்ளது. அதில் ஒன்றை பற்றி தான் இப்பொழுது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் நிம்மதி நிலைக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அது காலை அல்லது மாலை என உங்களுடைய நேரத்திற்கு தகுந்தார் போல் செய்து கொள்ளலாம். இது தூபம் போடும் முறை போல தான். இதற்கு நீங்கள் கடையில் வாங்க வேண்டிய பொருள் தர்ப்பை புல்லும், பச்சைக் கற்பூரம். இது இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து வீட்டில் தூபம் போடுவதற்கு தூபக்கால் அல்லது ஒரு சிறிய மண்சட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தர்ப்பை புள்ளை சின்ன சின்னதாக நறுக்கி போடுங்கள். அத்துடன் பச்சை கற்பூரத்தை போட்ட பின்பு கொஞ்சமாக கல்லுப்பை போடுங்கள். இதை உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் ஏதேனும் ஒரு ஓரத்தில் வைத்து பற்ற வைத்து விடுங்கள். இதன் புகையானது வீடு முழுவதும் பரவ வேண்டும்.

இதில் சேர்த்து இருக்கும் தர்ப்பையும், கல் உப்பும் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி எதிர்மறை எண்ணங்கள் கண் திருஷ்டி போன்றவற்றை உடனே வெளியேற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. பச்சைக் கற்பூரமானது தெய்வ ஆற்றலை அதிகரிக்கக் கூடியது. இவை இரண்டும் சேர்த்து போடப்படும் இந்த தூபத்தால் வீட்டில் உள்ள தேவையில்லாத குழப்பமான சூழ்நிலை மாறி நிம்மதி நிலவும்.

இதையும் படிக்கலாமே: மணிபர்சில் பணம் சேர வைக்க வேண்டிய பொருள்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும். இதை குறைந்தது மூன்று மாதங்களாவது செய்ய வேண்டும். அப்பொழுது தான் இதற்கான முழு பலன் கிடைக்கும். அதன் பிறகு மாதத்திற்கு ஒரு முறை இது போல செய்தால் போதும். வீடு எப்பொழுதும் தெய்வ கடாட்சத்துடன் இருக்கும். வீட்டில் நிம்மதியாக வாழ இந்த எளிய பரிகார முறையை செய்ய விருப்பம் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -