மணிபர்சில் பணம் சேர வைக்க வேண்டிய பொருள்

moneypurse
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் ஆண் பெண் இருபாலரில் மணிபர்ஸ் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை‌. வீட்டில் பணம் வைக்க இடம் இருந்தாலும் பணம் கைக்கு வந்தவுடன் முதலில் வைக்கும் இடம் மணி பர்ஸ் தான். அத்தகைய மணிபர்ஸை வாங்கும் போதும் பயன்படுத்தும் போதும் ஒரு சில தாந்திரீக வழிமுறைகளை பின்பற்றும் போதும் மணிபர்சில் எப்போதும் பணம் நிறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு சிலருக்கு பர்சில் எவ்வளவு பணம் வைத்தாலும் சிறிது நேரத்திற்குள்ளாகவே பணம் இல்லாமல் காலியாகி விடும். அந்த நிலை மாறி எப்பொழுதும் பர்சில் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அதில் பண ஈர்ப்பை அதிகரிக்க கூடிய பொருள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பொருள் நம்முடைய மணி பர்சில் இருக்கும் போது நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். இதனால் நம்முடைய தேவைக்கு கூட பிறரிடம் சென்று கை நீட்டி கடன் வாங்காமல் நம் கையில் பணம் எப்போதும் இருக்க உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் சேர பரிசில் இருக்க வேண்டிய பொருள்

முதலில் பணம் சேர மணி பர்ஸ் வாங்கும் முறையும் அதை வாங்குவதற்கான நாளையும் தெரிந்து கொள்வோம். ஏனெனில் இந்த பொருளை வைத்து அதில் பணத்தை சேர்க்கும் போது அந்தப் பொருளுக்கான முக்கியத்துவம் என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் அதை வாங்கும் போதே சரியான முறையில் வாங்கி விட்டால் பாதி பிரச்சனை குறைந்தது போல ஆகி விடும்.

இந்த பர்ஸை வாங்கும் நாள் நம்முடைய நட்சத்திரத்திற்கு ஆறாவது நாளாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒருவருடைய நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடுத்து வரும் ஆறாவது நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் வாங்க வேண்டும். மணிபர்ஸ் சிகப்பு அல்லது பச்சை நிறத்தில் வாங்குங்கள். இவை இரண்டுத்திற்கும் பணத்தை ஈர்க்கக் கூடிய தன்மை அதிகம்.

- Advertisement -

இப்போது பர்சில் வைக்கக் கூடிய பொருள்களை பார்ப்போம். எப்போதும் பர்சில் நேர்மறை ஆற்றலை உருவாக்கக் கூடிய பொருட்களை வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயார் உருவம் பதித்த செப்பு நாணயம் தாமரை
உருவங்கள் பதித்த செப்பு நாணயம் இது இரண்டில் ஏதாவது ஒன்றை பர்சில் எப்பொழுதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த காயின் ஆறு எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இத்துடன் தன ஆகர்ஷத்தை ஏற்படுத்தக் கூடிய ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இவற்றில் உங்களுக்கு எது உகந்ததாகப்படுகிறதோ அதில் ஏதேனும் ஒன்றை வைத்து கொள்ளலாம்.

இவற்றையெல்லாம் செய்வதோடு மணி பர்ஸ் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்‌. அதில் தேவை இல்லாத சீட்டுகள், மருந்துகள், அடகு கடை ரசீதுகள் போன்றவற்றையெல்லாம் வைக்கக் கூடாது. முக்கியமான ஆவணங்களாக இருந்தால் அதையும் இப்போதெல்லாம் கைபேசியில் நகலெடுத்து வைத்துக் கொள்ளலாம். பெண்களும் மணிப்பரிசில் தங்களுடைய அழகு சாதன பொருட்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக யானை பொம்மை பரிகாரம்

மணி பரிசில் பணம் மற்றும் பணத்தை ஈர்க்கக் கூடிய பொருட்களை வைப்பதே சிறந்தது. நாளெல்லாம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணம் வந்தவுடன் வீண்விரயமானால் அது எத்தனை மனஉலைச்சலை தரும். உங்களின் உழைப்போடு சேர்த்து  ஒரு சில தாந்திரீக வழிமுறைகளை பின்பற்றும் போது இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த பதிவில் உள்ள தகவலில் உங்களுக்கு விருப்பம் இருக்குமேயானால் நீங்களும் பின்பற்றலாம்.

- Advertisement -