இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் உடனே உஷாராகி விடுங்கள். நிச்சயமாக யாரோ ஒருவர் உங்களுக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

amman1
- Advertisement -

மாந்திரீகம், செய்வினை, பில்லி, சூனியம் இவைகளில் ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு நம்பிக்கை இருக்காது. சொல்லப்போனால் இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எல்லா விஷயத்தையும் முழுமனதோடு உறுதியாக நம்புவார்கள். இதன் மூலம் இதுநாள்வரை பாதிப்பு இல்லாதவருக்கு இனி பாதிப்பு வரக்கூடாது. இருப்பினும் இப்படிப்பட்ட விஷயங்களில் அனுபவம் இல்லாதவர்கள் இந்த விஷயத்தின் மீது அவ்வளவாக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். சரி போகட்டும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவைப் படித்து பலன் பெறலாம்.

நம்முடைய வீட்டிற்கு எதோ ஒரு கெடுதல் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள எத்தனையோ அறிகுறிகள் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஒரு சில விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதாவது கெட்ட சகுனத்தை உணர்த்தக்கூடிய அறிகுறிகள் என்னென்ன. நம்முடைய வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் வருகிறது என்றால் அந்த வீட்டிற்கு ஏதோ ஒரு கஷ்டம் வருகிறது என்று அர்த்தம். விஷ ஜந்துக்கள் என்றால் அதில் முதலில் இருப்பது பாம்பு. குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கக்கூடிய வீட்டிற்குள் பாம்பு நுழைவது என்பது அவ்வளவு சரியான சகுனம் அல்ல.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த கருவண்டு. கருவண்டு ஒரு வீட்டிற்குள் அடிக்கடி தேடி தேடி வந்து வாசலுக்குள் நுழைய பார்க்கிறது என்றால் அதுவும் சரியான சகுனம் அல்ல. இந்த கருவண்டு மூலம் நம்முடைய வீட்டிற்கு யாரேனும் செய்வினையை செய்து அனுப்புவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக இந்த பட்டியலில் இருப்பது வவ்வால். வீட்டுக்குள் வவ்வால் ஆனது வரவே கூடாது. அதுவும் ரத்த காயத்தோடு வவ்வால் ஆனது நேராக நம் வீட்டில் வந்து விழுகிறது என்றால் அது நமக்கு ஏதோ ஒரு கெடுதலை கொண்டுவந்து சேர்க்க போகிறது என்று அர்த்தம். வவ்வால் வந்தால் அதை வீட்டிற்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு இருக்கக்கூடிய வழியை, பொழுது சாய்ந்த பின்பு அடைத்து வைப்பது தான் நல்லது.

- Advertisement -

உங்களுடைய வீட்டுக் கொல்லைப்புறத்தில் இடம் இருக்கிறது. அங்கு வவ்வால் வந்து தங்குகிறது எனும் பட்சத்தில் அதை தடுப்பதற்கான வழியை பாருங்கள். வீட்டுக் கொல்லைப்புறத்தில் கூட வவ்வால் வாசம் செய்வது அவ்வளவு சரியான விஷயம் அல்ல. சரி வவ்வால் வந்துவிட்டது. ரத்தத்தோடு வந்து விழுந்துவிட்டது என்ன செய்வது. உடனே பயந்து விட வேண்டாம். வவ்வாலை அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டு வவ்வால் விழுந்த இடத்தை சுத்தமாக கழுவி விட்டு அந்த இடத்தில் மஞ்சள் கலந்த தண்ணீர் அல்லது கோமியம் தெளித்து விட வேண்டும்.

பிறகு உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களின் ஜாதகத்தை கொண்டு போய் உங்களுடைய குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து உங்கள் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தை சொல்லி ஜாதகம் பார்க்க வேண்டும். யாருக்கேனும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னால் அந்த பரிகாரத்தை ஆன்மீக ரீதியாக செய்து முடித்து விடுங்கள்.

குலதெய்வ கோவிலுக்கு செல்லுங்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால், உங்களுக்கு வரவிருக்கும் கஷ்டத்தை கூட அந்த குலதெய்வம் தடுத்து நிறுத்திவிடும்‌. முன்கூட்டியே நமக்கு நடக்கக்கூடிய தீங்கினை சொல்லக்கூடிய ஒரு உயிரினம் தான் வவ்வால். ஆகவே வரப்போற கஷ்டத்தை முன்கூட்டியே நாம் தெரிந்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து விட்டால் பயமில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -