வீட்டில் என்றென்றைக்கும் ஐஸ்வரியம் நிலைத்து இருக்க இரவு படுக்கும் முன் அடுப்பின் மீது இதை வைத்து விடுங்கள்.

kitchen Gold coin
- Advertisement -

இப்போதுள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கஷ்டம், கடன், வறுமை போன்ற விஷயங்களை தான் நாம் அடிக்கடி கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம். இப்படி சொல்பவர்களும் நல்ல வேலையில் இருப்பார்கள், நல்ல வருமானமும் இருக்கும். அப்படி இருந்தாலுமே வீட்டில் பொருளாதார சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் கடனில் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

அப்படியானால் இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற யோசனை பலருக்கும் தோன்றும். நாம் நன்றாக தான் உழைக்கிறோம் சம்பாதிக்கிறோம் இருந்தாலும் ஏன் இப்படி ஒரு நிலைமை என்று அவர்களும் யோசிப்பார்கள். இதை விட இன்றளவும் பல வீடுகளில் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிலைமையும் இருக்கத் தான் செய்கிறது.

- Advertisement -

இதையெல்லாம் மாற்ற ஆன்மீகம் அந்த காலம் முதலலே சில தாந்திரீக விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. கால சூழற்சியால் நாம் பலவற்றை மறந்து விட்டோம் என்பது தான் உண்மை. இந்த வறுமை நிலை மாற நம் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கியமான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் பஞ்சம் வராமல் ஐஸ்வரியம் பெருக செய்ய வேண்டியது

ஒரு வீட்டில் பூஜையறைக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவத்தை அந்த வீட்டின் சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். பூஜையறையில் எப்படி மகாலட்சுமி தாயார் வாசம் நிறைய வேண்டும் என்று பூஜை செய்கிறோமோ, அதே போல சமையல் அறையில் இந்த வழிபாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -

அப்படியானால் பூஜை அறையை சமையல் அறைக்கு மாற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். அப்படி அல்ல, முடிந்த வரையில் சமையலறையில் ஒரு அன்னபூரணி தாயார் படத்தையாவது வைத்து அகல் விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் வீட்டில் தன தானியங்கள் பெருகும்.

அத்துடன் அன்றைய தின வேலைகளை எல்லாம் முடித்த பிறகு சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்களை அப்படியே போட்டு வைத்து அடுப்பை அசுத்தமாக விடக் கூடாது. இதை சுத்தம் செய்த பிறகு ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை அடுப்பின் மீது வைக்க வேண்டும். அடுப்பை எந்த காரணத்திற்காகவும் காலியாக விடக் கூடாது.

- Advertisement -

அது நீங்கள் பயன்படுத்தும் எந்த அடுப்பாக இருந்தாலும் சரி அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். வெறும் பாத்திரம் வைக்கக் கூடாது ஆகையால் தான் அதில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இது நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் தான். இரவில் தேவதையைகள் நம் வீட்டில் உணவருந்த வருவதாகவும் அப்போது அடுப்பின் மீது வெறும் பாத்திரம் இருந்தால் அவர்கள் கோபத்துடன் சென்று விடுவார்கள் என்றும் முன்னோர் சொல்ல கேள்விப்பட்டது.

இதையும் படிக்கலாமே: இந்த நாளில் குபேர பூஜை செய்தால் தீராத கடன் தீரும்.

கிராமங்களில் இன்றளவும் இரவு படுக்கும் பொழுது சமையல் மேடையில் கொஞ்சம் சாதம், உப்பு, தண்ணீர் என வைக்கும் பழக்கம் உள்ளது. நம்மால் அந்த அளவிற்கு எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வையுங்கள். மறுநாள் அதை எந்த பயன்பாட்டிற்கு வேண்டுமானாலும் அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.

- Advertisement -