இந்த நாளில் குபேர பூஜை செய்தால் தீராத கடன் தீரும்.

gubera1
- Advertisement -

ரொம்ப பெரிய கடன் பிரச்சினை இருக்கிறது. நிம்மதியான தூக்கம் இல்லை. நிம்மதியான சாப்பாடு இல்லை. எப்படியாவது இந்த கடனை திருப்பி கொடுக்க வழி கிடைக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் குபேரரை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். குபேரருக்கு உரிய இந்த நட்சத்திரத்தில், இந்த கிழமையில் பின் சொல்லக்கூடிய நேரத்தில், குபேரரை நீங்கள் ஒருமுறை வழிபாடு செய்து விட்டால் போதும்.

உங்களைப் பிடித்த பீடை விலகும். வறுமை விலகும். பணக்கஷ்டம் தீரும். குபேரரை எந்த நேரத்தில் எந்த கிழமையில் எந்த நட்சத்திரத்தில் வழிபாடு செய்தால் கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். ஆன்மீகம் சொல்லும் எளிமையான வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

கடன் தீர்க்கும் குபேர வழிபாடு

பொதுவாகவே வியாழக்கிழமை என்றால் அது குபேரருக்கு உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. அதிலும் அஸ்தம் நட்சத்திரத்தோடு சேர்ந்து வரக்கூடிய வியாழக்கிழமை நாளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மாதம் தோறும் அஸ்தம் நட்சத்திரம் வரும். அந்த நட்சத்திரமானது வியாழக்கிழமை வந்தால், அந்த நாளை நீங்கள் தவற விடக்கூடாது.

அஸ்தம் நட்சத்திரம் வியாழக்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய நாள் குபேரனுக்கு உகந்த நாள். இந்த நாளில் காலை 6 லிருந்து 7 மணி அளவில் குபேர வழிபாட்டை செய்யலாம். இல்லையென்றால் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த இரண்டு நேரத்தில் உங்களுக்கு எது சௌகரியமான நேரமோ அந்த நேரத்தில் குபேர பூஜை செய்யலாம்.

- Advertisement -

வீட்டிலேயே குபேர பூஜையை எளிமையாக செய்வது எப்படி என்பது நம்மில் பல பேருக்கு தெரியும். இருந்தாலும் அந்த வழிபாட்டு முறையை எப்படி செய்வது என்பதையும் இந்த பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம். குபேர விளக்கு என்று கடைகளில் கேட்டாலே கொடுப்பார்கள். அதை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு விளக்கு ஏற்றி பூஜையறையில் வைக்கவும். சில பேர் வீட்டில் குபேரர் சிலை அல்லது உருவப்படம் இருக்கும். அந்த குபேரர் படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பு இந்த விளக்கை ஏற்றி வையுங்கள்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் குபேரரை மனதார நினைத்து இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, குபேரருக்கு மிகவும் உகந்த பச்சை நிற குங்குமம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த பச்சை நிற குங்குமத்தால் குபேரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையறையின் முன்பு சின்ன கிண்ணம் வைத்துவிட்டு, இந்த பச்சை நிற குங்குமத்தை எடுத்து அந்த கிண்ணத்தில் இரண்டு விரல்களால் போட வேண்டும்.

அம்மனுக்கு குங்குமம் அர்ச்சனை செய்வோம் அல்லவா. அதேபோல இந்த குங்குமத்தை போடும்போது ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பச்சைக் கயிறு வாங்கி வைத்து இந்த அர்ச்சனையை மேற்கொள்ளலாம். இறுதியாக ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து குபேரரை மனதார பிரார்த்தனை செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வர பண வசியம் ஏற்படும். குபேரரின் ஆசிர்வாதம் கிடைக்கும். அந்த கயிறை வீட்டில் இருப்பவர்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். குபேர சம்பத்து கிடைக்கும். இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் செய்து விடுங்கள். வியாழக்கிழமையும் அஸ்தம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாள் உங்களுடைய கண்களில் பட்டுவிட்டது. இந்த பூஜையை நீங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்ப சண்டைகள் தீர எளிய பரிகாரம்

நல்லபடியாக பூஜையை செய்து முடித்து விட்டீர்கள் என்றால் நிச்சயம் உங்களுடைய கடன் ஒரு சில நாட்களில் அடைந்து விட்டது என்றே நினைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு பணக்கஷ்டத்தை போக்கும் ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை இது. அஸ்தம் நட்சத்திரம் வராமல் இருக்கும் வியாழக்கிழமைகளிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -