கணவன் மனைவிக்குள் இனி சண்டையே வராமல் இருக்க, 12 சனிக்கிழமையில் வீட்டில் இந்த தீபம் ஏற்றினால் போதுமே! தம்பதியர் ஒற்றுமைக்கு எளிய பரிகாரம்.

fight
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக காணவன் மனைவிக்குள் சண்டை வருவது இயல்பானது தான் என்றாலும் சில வீடுகளில் அது அதிகரித்து காணப்படும். எலியும், பூனையுமாக எப்பொழுதும் கணவன் மனைவியும் சண்டையிட்டு கொண்டிருந்தால் வீட்டில் நிம்மதி என்பது எப்படி உண்டாகும்? குடும்பம் நிம்மதியாக இருக்க, தம்பதியர் ஒற்றுமை கண்டிப்பாக தேவை. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் புரிந்து கொண்டு நடந்து கொள்ள செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்ற வேண்டிய எளிய தீப முறை என்ன? என்கிற ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தம்பதியர் ஒற்றுமைக்கு முதலில் வணங்க வேண்டியது விஷ்ணுவையும், லட்சுமியையும் ஆகும். பாற்கடலில் நாகத்தினை படுக்கையாக கொண்டு அதன் மீது சயனம் கொண்டிருப்பவர் விஷ்ணு பகவான் ஆவார். இந்த கோலத்தில் இருக்கும் விஷ்ணு பகவானுக்கு அருகில் மகாலட்சுமி அமர்ந்து கொண்டிருப்பார். இவர் அமர்ந்து கொண்டிருப்பது மட்டும் அல்லாமல், தன்னுடைய கணவரான விஷ்ணு பகவானுடைய கால்களை இதமாக அமுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.

- Advertisement -

குடும்பத்தில் துன்பங்கள் இல்லாமல் மகிழ்ச்சி எப்பொழுதும் நிறைந்து இருக்க கணவனுடைய சொல் கேட்டு மனைவியும், மனைவியுடைய அறிவுரையை கேட்டு கணவனும் ஒருவரை ஒருவர் நீ வேறல்ல நான் வேறல்ல, என்று நினைத்து அன்னோனியமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே மனைவி கணவனுக்கு பணிவிடை செய்கிறாள். இதனால் பல ஆண்கள் மனைவியை அடிமையாக பார்ப்பது தவறான செயலாகும். இதனால் உங்களுடைய குடும்பம் தான் சீர்குழையும்.

ஆணும் பெண்ணும் சமம் ஆவார். கணவனுடைய கஷ்டங்களில் பெண் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் குடும்பத்தில் செல்வத்திற்கு பஞ்சமே இருக்காது. பிரச்சனைகளுக்கும் இடம் இருக்காது. அதே போல ஒரு பெண்ணுக்கு என்ன தேவை? என்பதை கணவன் உணர்ந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்பம் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கும். இப்படி தொடர்ந்து சண்டை சச்சரவுகளோடு நிம்மதியும், மகிழ்ச்சியும் தொலைத்து விட்டு பயணித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களில் இருக்கும் ஆணோ, பெண்ணோ இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

- Advertisement -

12 சனிக்கிழமைகளில் மகாலட்சுமி அல்லது விஷ்ணு பகவான் படம் வைத்திருந்தால் அதற்கு முன்பாக சுத்தம் செய்து அலங்காரம் எல்லாம் முடித்த பின்பு இரண்டு அகல் தீபங்களில் சுத்தமான எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி பன்னிரண்டு சனிக்கிழமைகளில் விஷ்ணுவிற்கு இரண்டு அகல் விளக்குகளில் எள் எண்ணெயால் தீபம் ஏற்றி வந்தால் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கும். இனி கணவன் மனைவிக்குள் சண்டை என்பதே வராது, ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

எள் எண்ணெய் ரொம்பவும் சக்தி வாய்ந்த ஒரு எண்ணெயாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த எண்ணெய் கொண்டு வீட்டில் தாராளமாக தீபம் ஏற்றலாம். சனி பகவானுக்கு ஏற்றப்படும் எள் தீபத்தை வீட்டில் கண்டிப்பாக ஏற்றக் கூடாது, ஆனால் எள் எண்ணெயால் தீபம் ஏற்றினால் சகல நன்மைகளும் உண்டாகும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது எனவே இதை எளிய பரிகாரத்தை கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் செய்து குடும்பத்தில் நிம்மதியை கொண்டு வர முயற்சிக்கலாமே!

- Advertisement -