உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கிறதா? குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி இல்லையா? இந்த சூழ்நிலை மாற இந்த ஒரு பூ மட்டும் போதும்

deepam
- Advertisement -

ஒரு சில வீடுகளில் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை நடக்கும். அப்படி இல்லை என்றால் மாமியார் மருமகள் இடையிலேயயோ அல்லது குடும்பத்தில் இருக்கும் வேறுநபர்களுக்கிடையயிலேயோ அடிக்கடி சண்டை நடந்து கொண்டே இருக்கும். இந்த வீடா அப்பப்பா எப்பொழுதும் ஒரே சண்டை தான் என பலரும் கூறும் வகையில் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு சண்டை நடப்பதற்கு காரணம் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. என்னதான் சுமூகமான சூழ்நிலையில் வாழ நினைத்தாலும் இவ்வாறான பிரச்சினைகள் வருவது என்பது இயல்புன ஒரு விஷயம்தான். இதுபோன்ற சூழ்நிலையில் மனது மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதில்லை. இவ்வாறான சூழ்நிலை மாறி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ இந்த மனோரஞ்சித பூவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight4

இவ்வாறு தொடர்ந்து சண்டைகள் நடந்து கொண்டிருந்தால் நம்மை சுற்றி எப்போதும் எதிர்மறை சக்திகள் தான் நிலவிக் கொண்டிருக்கும். இதனால் நமது வீட்டில் எப்போதும் நல்ல காரியங்கள் நடப்பது என்பது தடைபட்டுக் கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் இருக்காது. பணிபுரியும் இடத்திலும் பிரச்சனை உண்டாகும். எனவே நமது மனது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது அப்போது தான் நம்மை சுற்றியும் நல்ல விஷயங்கள் நடக்கும்.

- Advertisement -

எனவே நமது வீட்டின் கெட்ட சூழ்நிலையை மாற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு மனோரஞ்சித பூவை வாங்கி கொண்டு அதனை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பிறகு 100 கிராம் சுத்தமான பசுநெய் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 100 கிராம் குங்குமாதி தைலம் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

manoranjitham

இந்த இரண்டும் சேர்ந்த கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொண்டு, அதில் மனோரஞ்சித பூவையும் சேர்க்கவேண்டும். பிறகு சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். அதன்பின் பத்து ஏலக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கி அதனையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

- Advertisement -

இந்தக் கலவையை 18 நாட்கள் அப்படியே ஊறவிட வேண்டும். பிறகு இந்த எண்ணையை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும். அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றிக் கொண்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம். அவ்வாறு வீட்டின் கூடத்திலும், படுக்கை அறையிலும் எங்குவேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். ஏனென்றால் பிரச்சினைகளைக் குறைக்கின்ற சக்தி இந்த எண்ணெய்க்கு இருக்கிறது. மனோரஞ்சிதம் பூ விற்கும் மனதை சாந்தப் படுத்தும் திறன் இருக்கிறது.

yugaliptus-oil

எனவே பிரச்சனை எந்தெந்த இடத்தில் உண்டாகுமோ அங்கெல்லாம் இந்த தீபம் ஏற்றி வைப்பது நன்மையை கொடுக்க வல்லது. அவ்வாறு இந்த தீபத்தை ஒவ்வொரு நாளும் ஏற்றி வரும் பொழுது பழைய திரியை மாற்றி புதுதிரரி போட்ட பின்புதான் தீபமேற்ற வேண்டும். இந்த எண்ணணெய் தீரும்வரை தீபம் ஏற்றி முடிக்க வேண்டும்.

deepam

பின்னர் அந்த எண்ணெயில் இருக்கும் மனோரஞ்சித பூவை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். மீண்டும் இவ்வாறு மனோரஞ்சித பூவை வாங்கி இது போன்ற எண்ணெய் தயாரித்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து அந்த எண்ணெயில் தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் உண்டாகும் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு, மனது எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும். உங்களைச் சுற்றி எப்பொழுதும் நல்லதே நடக்கும்.

- Advertisement -