இந்த 5 விஷயங்களைக் கடைப்பிடித்தாலே போதும். துர் சக்திகள், துர் தேவதைகள், துர் ஆத்மாக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்கும்.

nila-vasal1
- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் தலைவாசல் படியின் வழியாக நல்ல சக்திகள் எப்படி வருகின்றதோ, அதேபோல சில சமயம் கெட்ட சக்திகளும், கெட்ட தேவதைகளும், கெட்ட ஆத்மாக்களும் நுழைய பார்க்கும். அப்படி வீட்டிற்குள் நுழைய கூடிய கெடுதலை தடுத்து நிறுத்த நம் நிலை வாசல் படியில் என்னென்ன பொருட்களை வைக்கலாம். நிலைவாசல் படி எப்படி இருந்தால் வீட்டிற்குள் கெட்ட சக்தியால் நுழைய முடியாது என்பதை பற்றிய சின்னசின்ன ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதோடு மட்டுமல்லாமல் பொறாமை குணத்துடன், கெட்ட எண்ணத்தோடு நம் வீட்டிற்குள் நுழைபவர்களாலும் நம்முடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராது.

பொதுவாகவே ஒரு வீட்டினுடைய நிலை வாசல்படி என்றால் அது பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்க வேண்டும். வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு, அந்த கோலத்துக்கு நடுவே சிறிது மஞ்சள் குங்குமத்தை வைத்தால் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தியும் வராமல் இருக்கும். முடிந்தால் கொஞ்சம் பசுஞ்சாணத்தை அந்த கோலத்தின் மீது தினம்தோறும் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் கரைத்து நிலை வாசலுக்கு நேராக தெளித்து விட வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக நிலை வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை பழைய மாவிலைகளை மாற்றினால் கூட போதும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டாயமாக வேப்பிலையை புதிதாக கொண்டு வந்து நிலை வாசலில் வையுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்ட சக்தி, கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது.

சாபநிவர்த்தி செய்த ஆகாச கருடன் கிழங்கை நிலை வாசலில் கட்டி வைத்தால் வீட்டிற்குள் எந்த கெடுதலும் நுழையாது. விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் நுழையாது. விநாயகர் கோவிலில் இருந்து விநாயகருக்கு மேலே வைத்த அருகம்புல்லை சிறிதளவு கொண்டுவந்து நிலை வாசல்படியில் சொருகி வைக்கலாம்.

- Advertisement -

நிலைவாசல் படியில் இரண்டு பக்கமும் கட்டாயமாக மஞ்சள் குங்கும பொட்டு இட்டு இருக்க வேண்டும். உங்களுடைய நிலை வாசல் கதவில் ஸ்வஸ்திக் சின்னம் அல்லது ஓம் சின்னம் அல்லது திரிசூலம் இப்படி ஏதாவது ஒரு ஆன்மீக ரீதியான குறியீட்டை வைப்பது மிக மிக நல்லது. ஒரு ஸ்டிக்கரில் கிடைத்தால் கூட அதை வாங்கி நிலைவாசல் கதவில் ஒட்டி வையுங்கள். படிகார கல்லுக்கு எதிர்மறை ஆற்றலை விரட்டக் கூடிய சக்தி உள்ளது. ஒரு கருப்பு நிற கயிறில் படிகாரகல் கட்டி, நிலை வாசல் படிக்கு மேலே வீட்டிற்கு வெளியே தொங்க விடுங்கள்.

மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், இதில் ஏதாவது ஒன்றை செய்தால் கூட உங்களுடைய வீடு பாதுகாப்பாக இருக்கும். உங்களுடைய வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் அவ்வளவு சுலபமாக நெருங்க முடியாது.

- Advertisement -