படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க முருகன் வழிபாடு

job offer
- Advertisement -

இந்த உலகத்தில் வேலைக்கு பஞ்சமே இல்லை. எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் பலரும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை வேண்டும், திறமைக்கேற்ற வேலை வேண்டும், அந்தஸ்தை உயர்த்தக்கூடிய வேலை வேண்டும் என்று நினைப்பதுதான். உண்மையிலேயே நன்றாக படித்து திறமை இருந்தும் அதற்கான முயற்சிகளை முறையாக செய்தும் வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் அவர்கள் செய்யும் வேலை. ஒருவருடைய வேலையின் அடிப்படையிலேயே அவருடைய வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வருமானத்தின் அடிப்படையிலேயே அவருடைய அந்தஸ்தும் நிர்ணயிக்கப்படுகிறது. இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு நல்ல வேலை அமைந்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை அவரால் பெற முடியும். இந்த நல்ல மாற்றத்தை பெறுவதற்கு உதவக்கூடிய தெய்வமாக முருகப்பெருமான் திகழ்கிறார்.

- Advertisement -

முருகப்பெருமானை நாம் பல வேண்டுதல்களுக்காக வழிப்படுகிறோம். பரிகாரங்களை செய்கிறோம். வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் முருகப்பெருமானின் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை அன்று போக வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு கல் உப்பு ஒன்று இருந்தால் போதும். கோவிலுக்கு செல்லும் பொழுது கல் உப்பு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கோவிலின் வாசலில் இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்து நன்றாக இறுகப் பிடித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

அங்கு இருக்கும் முருகப்பெருமானிடம் வேலை தொடர்பான வேண்டுதலை வைக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானை 19 முறை வலம் வர வேண்டும். வலம் வரும்பொழுது நம்முடைய வேலை தொடர்பான வேண்டுதலை மட்டும்தான் தொடர்ச்சியாக செய்து கொண்டு வர வேண்டும். வேறு எந்த வேண்டுதலையும் செய்யக்கூடாது. கடைசியாக வலம் வந்த பிறகு முருகா என் வாழ்க்கை உன் கையில் என்று முருகனிடம் சரணாகதி அடைந்து விட்டு கோவிலுக்கு வெளியே வந்து ஒரு ஓரமாக இந்த உப்பை போட்டு விட வேண்டும். அங்கேயே சிறிது தண்ணீரை ஊற்றி கையை கழுவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டிற்கு வந்து ஐந்து நிமிடம் அப்படியே அமர்ந்து விட்டு பிறகு மற்ற வேலைகளைப் பார்க்கச் செல்லலாம். குறிப்பு இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கையில் உப்பை எப்பொழுது எடுக்கிறோமோ அதற்கு முன்பாகவே நம்மிடம் இருக்கக்கூடிய வாட்ச், போன், மோதிரம், செயின் என்ற உலோகங்களால் ஆன பொருட்களை எடுத்து வைத்துவிட்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பெண்களாக இருக்கும் பட்சத்தில் தாலி செயினை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது கல் உப்பின் ஆகர்சன சக்தியும் முருகப்பெருமானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: சகல சௌபாக்கியம் தரும் மகாலட்சுமி பூஜை

மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு விரும்பிய வேலை கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.

- Advertisement -