நினைத்த வேலை கிடைக்க பரிகாரம்

arasa maram job
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் வேலை கிடைப்பதே பெரிய குதிரை கொம்பான விஷயம். பலரும் படித்து விட்டு படிப்பிக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை வேறு வழியில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடம் கஷ்டப்பட்டு படித்து வந்த பிறகு அதற்கேற்ற வேலையோ வருமானமும் கிடைக்கவில்லை என்றால் அது எத்தனை துயரமானது.

இன்னும் சிலரோ தனக்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இப்படி வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களும் கிடைத்த வேலையை ஏதோ செய்ய வேண்டுமே என்று செய்பவர்களும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது அவர்கள் பிடித்த வேலை அவர்களை தேடி வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த பரிகாரம் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேலை கிடைக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை மாதத்தில் ஒரு முறை செய்தால் போதும். அதுவும் அமாவாசை தினத்தன்று மட்டும் செய்தால் போதுமானது. அமாவாசை அன்று காலை முதல் இரவுக்குள் இந்த பரிகாரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். மதியம் உச்சி காலப் பொழுதில் மட்டும் இதை செய்யக் கூடாது.

அமாவாசை அன்று கையில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்தடித்தடிக்கு செல்லுங்கள். அங்கு அரச மரத்திற்கு முன்பாக நின்று உங்களுடைய வேலை தொடர்பான வேண்டுதலை வைத்த பிறகு கையில் உள்ள பச்சரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கொண்டே அரசமரத்தை ஒன்பது முறை சுற்றுங்கள். மரத்தை சுற்றும் போது நீங்கள் எந்த வேலையை நினைக்கிறீர்களோ அது கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை மூன்று மாதம் தொடர்ந்து செய்தால் போதும். அதாவது மூன்று அமாவாசை செய்யுங்கள். இத்துடன் சேர்ந்து வேலை கிடைப்பதற்கான உங்கள் முயற்சியில் சற்றும் தளர்ந்து விடாமல் செய்து கொண்டே இருங்கள். இதற்குள்ளாக நிச்சயம் உங்களுக்கான வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க வேல் வழிபாடு

அது மட்டும் இன்றி வேலை கிடைத்தும் வருமானம் போதாமல் இருப்பவர்கள். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பவர்கள். வேறு நல்ல வேலைக்கு முயற்சி செய்பவர்கள் எல்லோரும் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வேலை கிடைப்பதற்கான இந்த எளிய பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்யலாம்.

- Advertisement -