நல்ல வேலை கிடைக்க கோதுமை விளக்கு

pillaiyar2
- Advertisement -

நல்ல வேலை கிடைக்கணும். கை நிறைய சம்பாத்தியம் பெறணும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கு. ஆனால் சில பேருக்கு விதியின் பயனால், படிப்பு இருந்தும் முயற்சிகள் செய்தும், தகுதி இருந்தும், வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வரக்கூடிய சூழல் நிலவுகிறது. உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, சீக்கிரமே ஒரு நல்ல வேலையில் அமர நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த விளக்கை நம்பிக்கையோடு ஏற்றினால், நீங்கள் நினைத்ததை விட பல மடங்கு நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். கை நிறைய சம்பளமும் கிடைக்கும். உங்களை வேலையில்லா கஷ்டத்தில் இருந்து மீட்டு எடுக்கக்கூடிய அந்த விளக்கு பரிகாரம் பற்றி தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க கோதுமை விளக்கு

முழு கோதுமையை அரைத்த, கோதுமை மாவில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு அகல் விளக்கு செய்ய தேவையான அளவு கோதுமை மாவு எடுத்துக்கோங்க. அந்த கோதுமை மாவில் இரண்டு மூன்று துளசி இலைகளை கிள்ளி போடுங்க. ஒரே ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

இதில் அகல் விளக்கு செய்ய வேண்டும். உங்க வீட்டில் இருக்கும் மண் அகல் விளக்குக்கு நடுவே இந்த மாவை வைத்து அப்படியே விளக்கு போல செட் பண்ணிக் கொள்ளலாம். தவறு கிடையாது. இந்த விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் நவகிரக சன்னிதானம் இருந்தால் அந்த இடத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் உங்க வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி விநாயகர் இருந்தால் அவருக்கு இந்த தீபத்தை ஏற்றி, வைத்து அரச மரத்தை மூன்று முறை வளம் வந்து நல்ல வேலை கிடைக்க வேண்டுதல் வைக்கணும். இந்த விளக்கை வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஏற்ற வேண்டும். ஒன்பது வாரம் சனிக்கிழமை இடைவிடாமல் இந்த விளக்கை ஏறுபவர்களுக்கு, நிச்சயம் நல்ல வேலை கிடைப்பது உறுதி.

சில பேருக்கு கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாது. அப்படி என்றால் உங்களுடைய வீட்டிலேயே இந்த விளக்கை பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தை நினைத்து ஏற்றலாம். வாரம் தோறும் சனிக்கிழமை இந்த விளக்கை ஏத்துங்க. 1 மணி நேரம் எரிந்தாலும் போதும். எரிந்த பிறகு அந்த அகல் விளக்குக்கு உள்ளே இருக்கும் கோதுமையை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். எறும்புகள் பூச்சிகள் வந்து அதை சாப்பிட்டுக் கொள்ளும்.

- Advertisement -

இந்த விளக்கை காலை நேரம் அல்லது மாலை நேரத்தில் ஏற்றலாம். கோதுமை மாவில் ஏற்றக்கூடிய இந்த விளக்குக்கு வேண்டுதலை உடனே நிறைவேற்றி வைக்கும் தன்மை இருக்கிறது. சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. மகாலட்சுமி கூறியது துளசி. சுக்கிர பகவானுக்கு உரியது குங்குமப்பூ.

இதையும் படிக்கலாமே: மங்களம் உண்டாக, பொன் பொருள் சேர பரிகாரம்

இந்த மூன்று கிரகங்களும் உங்களுக்கு நன்மையை கொட்டிக் கொடுக்கக் கூடியவை. ஆகவே நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -