ஹனுமனை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

hanuman
- Advertisement -

நிறைய பேருக்கு, உடனடியாக நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும். அடுத்த மாதம் நான் சம்பாதித்தால் தான் என் குடும்பம் மூன்று வேலை வயிறு நிரம்ப சாப்பிடும். இல்லையென்றால் பட்டினி என்ற சூழ்நிலையும் நிறைய பேருக்கு இருக்கிறது. எவ்வளவு தேடியும் நல்ல வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு தின கூலிக்கு செல்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

நிரந்தரமாக கைநிறைய சம்பளத்தோடு வேலையை தேடி நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களா. 27 நாட்கள் மட்டும் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். 27 நாட்கள் முடிவதற்குள் கைநிறைய சம்பளத்தோடு உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு வேலை கிடைத்துவிடும். வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க ஹனுமன் வழிபாடு

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். பெண்களாலும் இதை செய்ய முடியும். உங்களுடைய மாதவிடாய் நாட்களை கணக்கு வைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை தொடங்குங்கள். 27 நாட்களில் ஒரு நாள் கூட இடையில் தவறவிடக்கூடாது. அப்படி தவறவிட்டால் மீண்டும் முதலில் இருந்து 27 நாட்களை நீங்கள் கணக்கு வைக்க வேண்டி இருக்கும்.

தினமும் இரண்டு வெற்றிலைகளை எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். அனுமனது சன்னிதானம் சின்னதாக ஒரு சுவரில் இருந்தால் கூட பரவாயில்லை. சில கோவில்களில் சுவரில் அனுமனின் படம் சித்தரிக்கப்பட்டு இருக்கும். அந்த ஹனுமனைகூட நீங்கள் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

இரண்டு வெற்றிலைகளையும் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, கையை சாமி கும்பிடுவது போல வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கை கூப்பி இறைவனை வணங்கும் சமயத்தில், உங்கள் இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவிலும் இரண்டு வெற்றிலைகள் இருக்க வேண்டும். அனுமனுக்கு உரியது இந்த வெற்றிலை. வெற்றியை குறைப்பதும் இந்த வெற்றிலை தானே.

வெற்றிலையை இப்படியே உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு அனுமனை 9 முறை வளம் வந்து, அனுமனுக்கு முன்பாக ஐந்து நிமிடம் அமர்ந்து, கண்களை மூடி அப்படியே அனுமனை கும்பிட்ட நிலையில் மனதார பிரார்த்தனை வையுங்கள். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கணும் கை நிறைய சம்பாதிக்கணும் என்று, சிலர் குறிப்பாக சில இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இருப்பாங்க. அதற்கு ரிசல்ட் வராமல் காத்துக் கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

அந்த ரிசல்ட் சீக்கிரம் வரவும் இதை செய்யலாம். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதி விட்டு காத்துக் கொண்டிருப்பவர்களும் இதை செய்யலாம். வேண்டுதலை முடித்துவிட்டு கையில் இருக்கும் இரண்டு வெற்றிலைகளை அனுமனின் பாதங்களில் வைத்து விடுங்கள். அனுமனை தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பலாம்.

வழக்கம் போல நீங்கள் அனுமனுக்கு தேங்காய் உடைப்பது, துளசி வாங்கி கொடுப்பது, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது, என்று உங்கள் விருப்பம் போல நீங்கள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் உள்ளங்கைகளில் வெற்றிலையோடு உங்கள் ஒரு வேண்டுதலை சொல்லி அனுமனை 9 முறை வலம் வர வேண்டும். 9 முறை வலம் வரும்போதும் மனது அலைபாயக் கூடாது.

வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகம் எல்லாம் வரக்கூடாது. வேலை கிடைத்து தான் ஆக வேண்டும் என்று அனுமனுடம் வைக்கக்கூடிய வேண்டுதல் ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். ஹனுமனை வளம் வரும்போது மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருங்க.

இதையும் படிக்கலாமே: நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்ட பலனை பெற ஒரு நாள் எப்படி தீபம் ஏற்றினால் போதும்.

நிச்சயமா உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 27 நாட்களுக்குள் நல்ல செய்தி வருவதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. அனுமனின் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -