இந்த அக்டோபர் மாதத்தில் சுக்கிர பெயர்ச்சியால் சுக்கிர திசை அடிக்க போகும் 3 அதிஷ்ட ராசிகள்.

sukran
- Advertisement -

ஜோதிட சாஸ்திரப்படி எந்த ஒரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறும் பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிக்கும் உண்டு. சில ராசிகளுக்கு அது முன்னேற்றத்தையும் சில ராசிகளுக்கு சில தடைகளையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த அக்டோபரில் கடக ராசியிலிருந்து சுக்கிர பகவான் சிம்ம ராசிக்கு இடம் பெய்கிறார். இதனால் பலன் அடையப் போகும் ராசிகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ஒருவருடைய ராசியில் சுக்கிரன் பலன் பெற்று இருந்தால் அவர்கள் யோகக்காரர்கள் என்றே சொல்லலாம். சுக்கிர பார்வை யார் மீது படுகிறதோ அவர்களுக்கு மரியாதை, செல்வம், வேலை என அனைத்தும் நம்மை தேடி வர வைப்பார். அத்தகைய அற்புதமான சுக்கிர பகவானின் பார்வையால் யோகம் அடையப் போகும் மூன்று ராசிகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷபம்

இந்த ராசிக்கான அதிபதி வியாழன் ஆவார். சுக்கிர பகவான் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறும் போது இந்த ராசிக்கு சுப பலன்களைத் தரவிருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சுப காரியங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பெருகும். பணவரவு அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

சிம்மம்

இந்த ராசிக்கு அதிபதி செவ்வாய் கிரகம். சுக்கிர பெயர்ச்சியால் சுப பலன்களை அடையக் கூடிய ராசியில் சிரமமும் ஒன்று. இவர்களுக்கு இந்த மாதத்தில் திடீர் பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். இந்த மாதம் அனைத்து வேலைகளையும் உற்சாகமாக செய்வீர்கள். அதுமட்டுமின்றி புதிதாக தொடங்கும் வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

துலாம்

இந்த ராசிக்கான அதிபதியே சுக்கிர பகவான் தான். இந்த பெயர்ச்சி இவர்களுக்கு பல அமோகமான பலன்களை தரவிருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் நடத்துபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். எடுத்த காரியங்கள்அனைத்திலும் வெற்றியை காண்பீர்கள். ஆக மொத்தில் இவர்களுக்கு இது பணவரவை அள்ளித் தரக் கூடிய மாதமாக அமைந்துள்ளது.

ஜோதிட சாஸ்திரம் என்பது ஒருவரின் எதிர்கால வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வதற்காக மட்டும் இல்லாது கிரகங்களின் மாற்றத்தால் எதை எப்போது செய்தால் நாம் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒரு வழிகாட்டல் ஆகும். இதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து அதற்கேற்ற முறையில் சரியாக நம் வாழ்வை தொடரலாம்.

இதையும் படிக்கலாமே: கேதுவால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க செய்ய வேண்டிய சூட்சம பரிகாரங்கள்.

இந்த மாத சுக்கிர பெயர்ச்சியால் பலன் அடையப்போகும் மூன்று ராசிகளை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். சுக்கிர பெயர்ச்சியால் சாதகமான பலனை பெறக்கூடிய இந்த ராசிக்காரர்கள் இந்த மாதத்தை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

- Advertisement -