வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைக்கவும், கிடைத்த வேலையில் பதவி உயர்வுடன் அதிக சம்பளம் கிடைக்கவும் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தால் போதும்.

hanuman Sign wallet
- Advertisement -

வேலை கிடைப்பது என்பது இன்றைய கால சூழ்நிலையில் தனி நபரின் பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ள முடியாது. எங்கு பார்த்தாலும் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் ஏராளமானோர். அது மட்டும் இன்றி வேலை எதுவும் கிடைக்காமல் கிடைத்த வேலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வது அல்லது திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பதிவில் நான்கு ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. வாருங்கள் அந்த பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க பரிகாரம்:
முதலில் வேலை தேடுபவர்களாக இருக்கட்டும், பதவி உயர்வு இருக்கட்டும் இவர்களுக்கு அதிக அளவில் துணை புரியும் கடவுளாக விளங்குபவர் ஆஞ்சநேயர். இவரை வணங்கி தினமும் அனுமன் சாலிசா படித்தால் நம்முடைய வேலை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரம் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. தினமும் சொல்ல முடியாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமாவது அனுமன் சாலிசாவை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதே போல் செவ்வாய்க்கிழமையில் கோவிலுக்கு சென்று கோவில் அருகில் உணவில்லாமல் அமர்ந்திருப்பவர்களுக்கு மஞ்சள் நிற தோல் உடைய வாழைப்பழத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு உகந்த நிறமாக சொல்லப்பட்டிருக்கிறது. குருவானாவர் பணத்திற்கு அதிபதியான கிரகம். இந்த தானத்தின் மூலம் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், அது மட்டும் இன்றி வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் பதவி உயர்வுடன் கூடிய சம்பளமும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அதே போல் வேலை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் மணி பரிசில் ஒரு சின்ன சிகப்பு நிற துணியை எப்பொழுதும் வைத்திருந்தால் நாம் தேடும் முயற்சிகளுக்கு எல்லாம் வெற்றி தரக்கூடிய ஆற்றலை தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சிகப்பு நிறம் மங்களமான ஒரு செயலை குறிக்கக்கூடியது. அது மட்டும் இன்றி அது பார்வதி தேவிக்கு உகந்த நிறம். இந்த நிறத்திலான துணி நம்மிடம் இருக்கும் பொழுது நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இவை அனைத்திலும் விட முக்கியமான ஒன்று நாம் கையெழுத்து போடும் முறை. சிலர் கையெழுத்து போடும் போது கடைசியாக ஒரு புள்ளி வைத்து நிறுத்துவார்கள். அப்படி கையெழுத்து போடவே கூடாது. நம் கையெழுத்தின் கடைசியில் புள்ளி வைத்து நிறுத்தும் போது நம் முன்னேற்றத்திற்கு நாமே முற்றுப் புள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

ஒருவருடைய கையெழுத்தை வைத்து தலையெழுத்தை சொல்லலாம் என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு கையெழுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் கையெழுத்து போடும் முறை இப்படியானதாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி கையெழுத்து போடுவதால் வேலை தொடர்பாகவோ அல்லது பதவி உயர்வு எது சம்பந்தமான எந்த முயற்சியும் உங்களுக்கு பலன் அளிக்காது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நம் வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை ஒரு முறையேனும் செய்தால் இறந்த பின்பு அதிகம் துன்பப்பட வேண்டாமாம் தெரியுமா? என்ன தானம் அது?

நீங்கள் வேலை சம்பந்தமாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுடன் இந்த நான்கு விஷயத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் முயற்சிக்கான பலன் விரைவிலே கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நான்கு விஷயங்களை கடைப்பிடித்து பார்க்கலாம்.

- Advertisement -