நினைத்த வேலை அமையவில்லை என்கிற புலம்பல் தினமும் இருக்கிறதா? இத செஞ்சிட்டு அப்புறம் தேடுங்க எண்ணியபடியே மனதிற்கு பிடித்த வேலை அமையும்!

velai-job-kula-dheivam
- Advertisement -

வீட்டிற்கு ஒருவர் படித்த படிப்பிற்கு உரிய வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவர்கள் இல்லாமல் இருக்கவே முடியாது. நூற்றுக்கு 60% பேர் தான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை செய்வதில்லை. லட்சியத்திற்காக படித்தவர்கள் கூட, வயிற்றுப் பிழைப்புக்காக வேறு ஒரு வேலையைத் தேடி தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொள்வர். மனதிற்கு பிடித்த வேலை அமைவது என்பது கூட ஒரு பாக்கியம் தான்! இந்த பாக்கியத்தை எளிதாக பெறுவதற்கு உரிய வழிபாடு முறையை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நீங்கள் நினைத்த வேலை அமைவதற்கு முதலில் இறைவனுடைய திருவடிகளை சரணடைய வேண்டும். ஒரு மனிதன் என்ன வேலை செய்ய வேண்டும்? அவனுடைய எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? என்பதை கிரகங்களும், இறைவனும் தீர்மானிக்கின்றனர். இவர்களுடைய அனுகிரகம் இல்லையேல் சரியான வேலை அமைவதில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும்.

- Advertisement -

நம் குலத்தை காக்கும் குலதெய்வம் மற்றும் நம்முடைய மூதாதையர்கள் ஆசீர்வாதம் இருந்தால் உடனடியாக நம் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும் என்பது ஆன்மீகத்தில் சூட்சமமாக சொல்லப்படுகின்ற சிறந்த பரிகாரமாக இருக்கிறது. குலம் தழைக்க ஒரு மனிதன் நல்ல வேலையில் அமர வேண்டும். இது அடுத்தடுத்த சந்ததியினருக்கும் அந்த உழைப்பு ஒரு வகையில் கொண்டு போய் சேர்க்கக்கூடிய அரணாக அமைகிறது. எனவே குலம் செழிக்க ஒரு மனிதன் என்ன வேலை செய்ய வேண்டும்? என்பதிலிருந்து ஆரம்பமாகிறது.

பரம்பரை பரம்பரையாக மருத்துவத் தொழில் செய்து வருபவர்களுடைய குடும்பத்தை பார்த்தால் பெரும்பாலும் மருத்துவராக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கூலித் தொழிலாளியாக இருப்பவர் உடைய சந்ததியினரும் அவ்வகையில் பெரும்பாலும் கூலி தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அதிர்ஷ்டமும், இறைவனுடைய அனுகிரகம் கொண்டு அதிலிருந்து மீண்டும் வேறு ஒரு வாழ்க்கை பயணத்தை துவங்குகின்றனர்.

- Advertisement -

எனவே நம் குடும்பத்தை தலைத்தோங்க செய்யக்கூடிய அதீத சக்தி நம் மூதாதையர்களுக்கு உண்டு. பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதும், அவர்களுடைய ஆசீர்வாதத்தை அவ்வபோது பெற்றுக் கொள்வதிலும் உங்களுடைய வேலை நல்ல வேலையாக அமையும். வேலைக்கு இன்டர்வியூ செல்கிறீர்கள் அல்லது தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் யாராக இருந்தாலும் முதலில் வழிபட வேண்டியது உங்களுடைய மூதாதையர்களை மட்டுமே ஆகும். உங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி அல்லது தாய், தந்தையர் போன்ற இறந்தவர்களுடைய படத்தை வைத்து இருந்தால், அதற்கு ஒரு விளக்கு ஏற்றி, இரு கை கூப்பி நல்ல வேலை அமைய வேண்டும். நல்லபடியாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அடுத்ததாக குல தெய்வத்தை வணங்க வேண்டும்.

குலதெய்வம் தெரியாதவர்கள் உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். அதன் பின்பு நீங்கள் நெற்றியில் அவர்கள் ஆசீர்வதிப்பது போன்று எண்ணிக் கொண்டு விபூதி அல்லது குங்குமம் நெற்றியில் இட்டு கொண்டு வெளியில் சென்று பாருங்கள். நீங்கள் எதற்காக செல்கிறீர்களோ அது 200 சதவீதம் வெற்றி அடையும். நல்ல வேலை அமைய வேண்டும், அரசு உத்தியோகம் அமைய வேண்டும், கை நிறைய பணம் சம்பாதிக்கும் வேலை அமைய வேண்டும், தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு விளக்கு ஏற்றி இருகரம் கூப்பி வழிபடுங்கள், அதுவே சிறந்த பரிகாரமாக இருக்கும்.

- Advertisement -