வேலை கிடைக்க தீப வழிபாடு

murugan job
- Advertisement -

எப்பொழுதுமே வேலை என்பது எல்லோருடைய அடிப்படை தேவையாகத் தான் இருக்கிறது. ஏனெனில் வேலை நல்ல முறையில் அமைந்து அதற்கேற்ற வருமானம் தாராளமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும். வேலை இல்லை என்றால் வருமானம் இருக்காது வருமானம் இல்லை என்றால் எப்படி வாழ்க்கை போகும்?

ஆக ஒரு வாழ்க்கை சுமூகமாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு நிச்சயமாக நல்ல வேலையும் நல்ல வருமானமும் தேவை. இந்த வேலை எல்லோருக்கும் நல்ல முறையில் பிடித்ததாகவும் நிறைவானதாகவும் அமைந்து விடுகிறதா? என்றால் அதுவும் கிடையாது. சரி ஏதோ ஒரு வேலையாவது கிடைக்கிறதா? இருந்தால் பலர் படித்து விட்டு இன்னும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படியானால் வேலை கிடைத்து நல்ல முறையில் வாழ என்னதான் செய்வது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. வேலையில் இருந்து கொண்டு நல்ல வேலைக்கு மாற முயற்சிப்பவர்களும் புதிதாக வேலை தேடுபவர்களும் அவர்களுடன் முயற்சி உடன் சேர்த்து இந்த ஒரு தீப வழிபாட்டையும் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலை கிடைக்க வேலவன் வழிபாடு

இந்த வழிபாடுக்கு நாம் ஏற்றக்கூடிய தீபம் தான் மிகவும் முக்கியம். முருகப்பெருமாள் என்றாலே அவருக்கு உகந்த தினம் செவ்வாய்க்கிழமை தான். அதே போல் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு உகந்தது வெற்றிலை தீபம் இது பலரும் அறிந்த ஒன்று தான் ஆனால் வேலை கிடைக்கவும் இந்த வெற்றிலை தீபம் உதவி செய்யும் என்பது பலரும் அறியாததாக இருக்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றும் பொழுது வேலை தொடர்பான சிக்கல்கள் தீர்வதுடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 6 வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். ஆறு அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தட்டில் ஆறு வெற்றிலை வைத்து, அதன் மேல் இந்த ஆறு அகல் விளக்கையும் வைத்து எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்திற்கு முன்பாக முருகனுக்கு உகந்த அரளிப் பூவை ஆறு அகலுக்கு முன்பாகவும் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல் ஆறுமுகனுக்கு ஏதேனும் எளிய ஒரு நெய்வேத்தியத்தை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வேலவனை நினைத்து ஓம் சரவண பவ என்ற இந்த மந்திரத்தில் சொல்லி உங்கள் வேலை தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு முதல் நாள் காலை வேளையில் துவங்கினால் அதே போல் காலை வேளையிலே செய்ய வேண்டும் மாலையில் தொடங்கினால் மாலை வேலை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க ஏற்ற வேண்டிய தீபம்

இதுவரை நீங்கள் எத்தனை முயற்சி செய்தும் கிடைக்காத வேலையும் கிடைக்காத பதவி உயர்வு நல்ல சம்பளம் போன்றவை எல்லாம் இந்த ஒரு தீப வழிபாடு செய்வதன் மூலம் விரைவில் கிடைக்கும் அணுகூலத்தை பெறலாம். ஆகையால் உங்கள் முயற்சியுடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தை பற்றி ஏற்றுங்கள் நிச்சயம் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -