நீங்கள் செய்யக்கூடிய வேலையில் நிம்மதியே இல்லையா? பிரச்சனைகள் சரியாக, நல்ல வேலை கிடைக்க ஞாயிற்றுக்கிழமை இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

suriyan
- Advertisement -

நிறைய பேருக்கு நல்ல வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும். உடன் வேலை செய்பவர்களால் பிரச்சனை, மேல் அதிகாரிகளால் பிரச்சனை, தேவை இல்லாமல் நம் மீது பழி விழும் அளவிற்கு தொந்தரவுகள் இருக்கும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வேலை தேடி தேடி ஓய்ந்து போய் விட்டீர்கள். வேலையே கிடைக்கவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக நீங்கள் முயற்சி செய்பவர்களாக இருந்தாலும் இந்த பரிகாரம் பலன் தரும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு ஒரு விமோசனம் கிடைக்க வேண்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஞாயிறு என்றாலே சூரியனைக் குறிப்பது. வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய கடவுள் இந்த சூரிய பகவான். ஆக ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடாமல் இந்த பரிகாரங்களை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நவகிரக சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் நடுவில் இருக்கக்கூடிய சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு வீடு திரும்பும் போது உங்களால் முடிந்த அன்னதானத்தை ஏழைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். மூன்று பேர் அல்லது ஐந்து பேருக்கு காலை உணவு வாங்கி கொடுத்தாலும் சரி. வயிறார நல்ல சாப்பாட்டை வாங்கி கொடுங்கள். முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் விரதம் இருக்கலாம்.  உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என்னால் எதுவுமே சாப்பிடாமல் சூரிய பகவானுக்கு விரதம் இருக்க முடியும் என்பவர்கள் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம்.

- Advertisement -

முடியாதவர்கள் பால் பழம் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். இதே போல ஐந்து வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று, மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வர வேண்டும். ஐந்தாவது வாரம் ஞாயிற்றுக் கிழமை மேல் சொன்னபடி நவகிரகங்களில் சூரிய பகவானை வழிபட்டு விட்டு, முடிந்தவரை அன்னதானம் செய்து விட்டு, ஐந்து ஏழைகளுக்கு போர்வை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையிலும் கூட இருப்பதற்கு ஒரு இடம் இல்லாமல் பிளாட்ஃபாமில் உறங்குபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா. அப்படி கஷ்டப்படுபவர்களாக பார்த்து ஒரு ஐந்து பேருக்கு போர்வையை வாங்கிக் தானமாக கொடுத்து விடுங்கள். செருப்பு கூட வாங்க வழியில்லாமல் வெயிலில் கஷ்டப்பட்டு வெறும் காலில் நடப்பவர்கள் ஐந்து பேருக்கு செருப்பு வாங்கி தானமாக கொடுக்கலாம்.

ஐந்தாவது வாரம் மட்டும் போர்வை, செருப்பு வாங்கி தானம் கொடுத்தால் போதும். வாரம் வாரம் போர்வை செருப்பு தானம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் கட்டாயமாக வாரம் வாரம் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். ஐந்து வாரங்கள் நம்பிக்கையோடு சூரிய பகவானை நினைத்து அசைவம் சாப்பிடாமல் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வேலையில் இருக்கக்கூடிய கஷ்டம் நிச்சயம் நீங்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உடையவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -