மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க பரிகாரம்

dhupam1
- Advertisement -

இந்தப் பரிகாரம் ஒரு ராஜ வசிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்தால் ராஜாவையே நம்மால் வசியம் செய்ய முடியும். இந்த காலத்தில் ராஜாவெல்லாம் கிடையாது. ஆகவே இந்த காலத்துக்கு ஏற்றது போல இந்த பரிகாரத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் குறி வைத்து நம்மை திட்டிக் கொண்டே இருக்கும் மேல் அதிகாரிகள், முதலாளிகள், டீம் லீடர்கள், மேனேஜர் இவர்களை எல்லாம் ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் இந்த பரிகாரம் பயன்படும்.

அப்படி இல்லை என்றால் நம் முன்னேற்றத்தை தடுக்க கூடிய நபர் நம் வாழ்க்கையில் இருந்து விலகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சில வேலையில் நம்மால் முன்னேறவே முடியாது. காலம் நேரம் பார்க்காமல் உழைத்தாலும், உயர் பதவியை பெறுவதற்கு உண்டான தகுதியோடு நாம இருந்தாலும், முன்னேற்றம் இருக்காது. காரணம் யாராவது ஒருவர், நம்மை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். பிரமோஷன் கிடைக்காமல் தடுத்துக் கொண்டே இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களை எல்லாம் ஒரு கை பார்க்கவும் இந்த பரிகாரம் பயன்படும்.

- Advertisement -

யாரெல்லாம் உங்களை எதிர்த்து செயல்படுகிறார்களோ, யாரெல்லாம் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறார்களோ, அவர்களின் நினைத்து இந்த பிரச்சாரத்தை செஞ்சு பாருங்க. யாரை நினைத்து இந்த பரிகாரம் செய்கிறீர்களோ, அவங்க நீங்க சொல்ற பேச்சுக்கெல்லாம் தலையாட்டுவாங்க. அதற்காக தவறான முறையில் இந்த பரிகாரத்தை பயன்படுத்தக்கூடாது. சரி, அந்த ராஜ வசிய பரிகாரம் என்ன பரிகாரம் என்பதை பார்த்து விடுவோம். நன்னாரி கட்டையை வைத்து போடக்கூடிய தூபம் தான் இந்த பரிகாரம்.

மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க

புதன்கிழமை இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யணும். ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யணும். காலை மாலை இரு வேலையும் செய்யணும். பரிகாரம் என்றால் பெரிய விஷயம் அல்ல. வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கொஞ்சமாக நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் சாம்பிராணி தூபம் போடுங்கள். கூடவே சேர்த்து இந்த நன்னாரி கட்டையையும் சேருங்கள்.

- Advertisement -

கடைகளில் சின்ன சின்ன துண்டுகளாக இந்த நன்னாரி வேர் கிடைக்கும். இந்த நன்னாரி கட்டையில் தூபம் போடும் போது, யார் உங்களுடைய பேச்சைக் கேட்க வேண்டுமோ, அந்த நபரின் பெயரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நன்னாரி வேரியின் சுவாசம் உங்களுக்குள் செல்லும்போது, நீங்கள் யார் பெயரை சொல்றீங்களோ, அவங்க உங்க பேச்சை கேட்டு நடப்பாங்க.

அவங்க உங்க பேச்சுக்கு வசியம் ஆவார்கள். நன்னாரி பொடி கூட கடைகளில் விற்கிறது அதை வாங்கியும் தூபம் போட பயன்படுத்திக் கொள்ளலாம். வாரம் தோறும் விடாமல் புதன்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த புகையை போட்டு உங்களுக்கு தொல்லை கொடுக்கும் ஒரே ஒரு நபரை மனதில் நினைச்சுக்கோங்க.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர குலதெய்வ பரிகாரம்

உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நபர், உங்களுக்கு சாதகமாக பேச தொடங்கி விடுவார்கள். நீங்க சொல்ற பேச்சுக்கெல்லாம் பிறகு உங்கள் எதிராளி தலையை ஆட்ட ஆரம்பித்து விடுவார் அவ்வளவுதான். ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -