வெளியில் சொல்லவே முடியாத பிரச்சனைக்கு கூட தீர்வு தரும் கல்லுப்பு பரிகாரம். செவ்வாய்க்கிழமைகளில் இதை செய்ய மறக்கவே மறக்காதீர்கள்.

vilakku-uppu-lakshmi
- Advertisement -

அடுத்தவர்களுடைய பிரச்சனையை பார்க்கும்போது, நம்முடைய மனது நமக்கு தெரியாமலேயே ஒரு நிமிஷம் சந்தோஷப்படும். ‘அப்பாடா! அவர்களுக்கு வந்த கஷ்டம் நமக்கு வரவில்லை. எப்படியோ நம்முடைய வாழ்க்கையில் நாம் ஜெயித்து விட்டோம். என்று!’ இப்படி ஒரு சிறிய அற்பத்தனமான சந்தோஷத்தை நம்முடைய மனதும் மூளையும் நினைக்குமாம். உதாரணத்திற்கு பக்கத்து வீட்டில் அடிக்கடி சத்தத்தோடு சண்டை நடக்கும். அதை பார்த்து நம்மில் நிறைய பேர் பரிதாப படுவோம். இல்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் நம்முடைய மனதிற்குள் நம்முடைய வீட்டில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை என ஒரு எண்ணம் உடனடியாக எழும். ஆமாவா? இல்லையா? இதை எத்தனை பேர் பகிரங்கமாக ஒப்புக் கொள்வார்கள் தெரியாது. ஆனால் நிதர்சனமான உண்மை களில் இதுவும் ஒன்று. இதற்காக இந்த எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்பதும் அர்த்தம் கிடையாது.

sad

இப்படிப்பட்ட எண்ணம் உங்களில் யாருக்காவது எழுந்தால், அதற்காக பிராயச்சித்தம் தேடிக்கொள்ள ‘நீங்கள் யாருடைய கஷ்டத்தை பார்த்து, உங்களை அறியாமலேயே மனதிற்குள் லேசாக சந்தோஷப்பட்டீங்களோ, அவர்களுடைய கஷ்டம் தீர உங்களால் முடிந்த உதவியை செய்து விடுங்கள்’.

- Advertisement -

சரி, இப்போது பதிவைப் பார்ப்போம். நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையில், நிறைய வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்களை சரி செய்ய வேண்டும் என்றால் தாந்திரிக ரீதியாக ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. கல் உப்பை வைத்து சொல்லக்கூடிய பரிகாரங்கள் அனைத்துமே கைமேல் பலன் கொடுக்கக் கூடியவை தான். இந்த பரிகாரத்தை மூன்று வாரம் செவ்வாய்கிழமை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

uppu

செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். புதியதாக வாங்கிய கல்லுப்பு இதற்கு தேவை. சிறிய கண்ணாடி பவுலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு அதன் மேலே ஒரு விரலி மஞ்சளை வைத்து, அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடவேண்டும்.

- Advertisement -

ஒரு வாரம் முழுவதும் நீங்கள் தயார் செய்த இந்த கண்ணாடி பவுல் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். எப்போதும் போல பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு தினம்தோறும் உங்களுடைய வேண்டுதலை அந்த இறைவனிடம் வைக்க வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (செவ்வாய்க்கிழமை மதியம் குறிப்பிட்ட மேல் சொன்ன நேரத்தில் கண்ணாடி பவுலை தயார் செய்து வைத்து விடுங்கள். தினசரி வேண்டுதல் வைக்க பூஜை செய்வது எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அந்த நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.)

virali-manjal

அடுத்த வாரம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் குறிப்பிட்ட நேரமான மதியம் 12.00 மணியிலிருந்து 1.30 க்குள் கண்ணாடி பௌலில் இருக்கும் கல் உப்பை எடுத்து சுத்தமான நல்ல தண்ணீரில் கரைத்து விடுங்கள். ஒரு சிறிய சொம்பில் நல்ல தண்ணீரை எடுத்து உங்கள் கைகளிலேயே இந்த உப்பை கரைத்து விடவேண்டும். உப்பை கரைக்கும் போது உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும், இந்த உப்பு போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு கரையுங்கள். அந்த உப்பு தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். இல்லையென்றால் சிங்கிள் கொட்டி விடுங்கள்.

pray

அதன்பின்பு இந்த உப்புக்கு மேல்வைத்த மஞ்சளை நாம் எடுத்து பயன்படுத்தக்கூடாது. அந்த மஞ்சளை கால் படாத இடத்தில் அல்லது செடிகொடிகளுக்கு அருகில் போட்டுவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல மூன்று வாரம் செவ்வாய்க் கிழமைகளில் செய்துவர சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கும் கஷ்டங்கள் கூட உங்கள் வீட்டில் இருந்து காணாமல் போவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து அனைவரும் பலன் அடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -