வெளியில் வேறு யாரிடமும் சொல்ல முடியாத, தீர்க்கவே முடியாத பிரச்சனையை இந்த பேப்பரில் எழுதி வையுங்க. தீர்க்க முடியாத அந்தப் பிரச்சினை, உடனே தீரும்.

perungayam
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள், பிரச்சனைகள் என்று ஏதாவது ஒன்று இருக்கும். நண்பர்கள், உறவினர்கள், பிள்ளைகள், வாழ்க்கை துணை என்று அந்த பிரச்சனையை நம்மால் யாரிடமும் சொல்லவே முடியாமல் தவித்து வருவோம். அந்த பிரச்சனை எந்த பிரச்சினையாக இருக்கட்டும். அதை சரி செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் இது. மனதில் ஆரா தழும்பாய் இருக்கும் காயத்தை தீர்க்க போகும் அந்த தாந்திரீக பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம் இதோ உங்களுக்காக.

தீராத மனதில் இருக்கும் காயங்களை தீர்க்கும் பெருங்காய பரிகாரம்:
உதாரணத்திற்கு உங்களுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் விரும்பி கல்யாணம் கட்டிக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் விரும்பிய நபர் உங்களை வாழ்க்கையில் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை. குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு. அதை உங்களால் யாரிடம் போய் வெளியில் சொல்ல முடியும்? சில பேர் அந்த விஷயத்தை பெற்றவர்களிடம் சொல்லி விடுவார்கள். சில பேர் இப்படிப்பட்ட விஷயங்களை பெற்றவர்களிடம் சொல்லவும் முடியாமல், மற்றவர்களிடம் சொல்லவும் முடியாமல், மனதிற்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய பிரச்சனையை எழுதுங்கள். ‘என்னுடைய கணவர் இனி வரப்போகும் காலத்தில் என்னை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். என் வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்க வேண்டும். வெளியில் சொல்ல முடியாமல் நான் படும் கஷ்டம் இன்றோடு முடிந்து விட வேண்டும்’ என்று இந்த பிரபஞ்சத்திடம் சொல்லி, ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி விடுங்கள். (உங்கள் மனைவியால் பிரச்சனை என்றால், என் மனைவி என்று எழுதுங்கள்.) இதில் உங்களுடைய வாழ்க்கைத் துணையின் பெயரை எழுதிக் கூட பிரச்சினையை எழுதலாம். கோடு போட்ட பேப்பரில் எழுதாதீங்க. வெள்ளை காகிதத்தில் எழுதுங்க.

பிறகு இந்த பேப்பருக்கு நடுவில் சிறிய பெருங்காய கட்டி ஒன்றை வைத்து பேப்பரை நான்காக மடித்து மூன்று நாட்கள் இந்த பேப்பரை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். மூன்றாவது நாள் காலை எழுந்து இந்த பேப்பரை எடுத்து நெருப்பில் போட்டு பொசுக்கி விட்டு பிறகு நீங்கள் போய் குளித்து விட்டு வர வேண்டும். அவ்வளவுதான்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எத்தனை முறை வேண்டும் என்றாலும் நீங்கள் செய்யலாம். அல்லது ஒரே ஒருமுறை வேண்டும் என்றாலும் செய்து பார்க்கலாம். மனதில் இருந்த அந்த பெரிய காயத்தை இந்த பெருங்காய பரிகாரம் நிச்சயம் மாற்றிவிடும். உதாரணத்திற்கு தான் இந்த ஒரு கஷ்டம் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பெரிய கடன் சுமை, தீராத நோய் அல்லது சொத்து பிரச்சனை அல்லது வேறு சொந்த பந்தங்களுக்குள் பிரச்சனை, தேவையில்லாத பகையால் பிரச்சனை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இல்லையென்றால் நமக்கு ஒரு சிலரை ரொம்பவும் பிடித்திருக்கும். ஆனால் அவர்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் இருக்கும். அந்த நபரை பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படி ஆசைப்பட்டவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரம் செய்யலாம். சில சொந்தங்கள் பிரிந்து ரொம்ப நாள் ஆகி இருக்கும். ஆனாலும், நம்முடைய ஆழ்மனதில் அந்த சொந்தத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: வீட்டில் விளக்கு வைத்த பின் மறந்தும் கூட இதை செய்து வீடாதீர்கள். இப்படி செய்வதால் மகாலட்சுமி தாயாரை நாமே வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை போல ஆகி விடும்.

அதை இந்த பேப்பரில் எழுதுங்கள். குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை எழுதி, அந்த நபரை பார்க்க வேண்டும் என்று எழுதி, அந்த பேப்பருக்குள் பெருங்காயத்தை வைத்து, மூன்று நாள் தலையணைக்கு அடியில் அந்த பேப்பரை வைத்த பின்பு, தாராளமாக நெருப்பில் எரிக்கலாம். இந்த பிரபஞ்சம் உங்களது ஆசையை நிறைவேற்றும். தாந்திரீகமாக இருந்தாலும் இதையும் உங்கள் குலதெய்வத்தை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -