வெள்ளிக்கிழமை அரிசி மூட்டையில் இந்த 1 பொருளை மட்டும் போட்டு பாருங்க. உங்க வீட்ல பணம் காசு இல்லை என்ற வார்த்தையே காதில் கேட்காது.

mahalashmi1
- Advertisement -

இன்றைக்கு வெள்ளிக்கிழமை. மகாலட்சுமியை நினைத்துக் கொண்டு இந்த பதிவை படிக்க தொடங்குவோம். நம்முடைய வீட்டில் செல்வ கடாட்சம் நிறைவாக இருக்கும். பணமழை பொழியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். சந்தோஷம் பெருகும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும், எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். எதிர்மறையான எந்த வார்த்தையையும் பயன்படுத்தாமல், எந்த வார்த்தையையும் நாம் படிக்காமல் இன்றைக்கான நேர்மறை எண்ணங்களை குவிக்கும், பண வரவை கொடுக்கும் பதிவை பார்த்து விடலாம்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி கடாட்சம் பெருக அரிசி மூட்டையில் வைக்க வேண்டிய பொருள்:
நாம் எல்லோர் வீட்டிலும் குறைந்தபட்சம் 5 கிலோ அரிசியாவது வாங்கி வைப்போம். அந்த அரிசி மூட்டையில் இன்றைய தினம் நீங்கள் இந்த ஒரு பொருளை வைக்க வேண்டும். மகாலட்சுமி கடாட்சம் நிறைந்த துளசி இலை. ஐந்து துளசி இலைகளை பறித்து வந்து அந்த துளசி இலைகளை அரிசி மூட்டைக்குள் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதாவது அரிசி கொட்டி வைத்திருக்கும் டிரம்மிலும் இந்த துளசி இலைகளை போட்டு வைக்கலாம். சமையல் அறையில் அன்னபூரணி லட்சுமி நிலையாக இருக்கக்கூடிய அந்த இடத்தில், மகாலட்சுமி தேவி குடியிரு குடியேறும் போது உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.

அடுத்தபடியாக கிராம்பு. பண வசியத்தை ஏற்படுத்தக் கூடிய பொருள் இது. ஒரு வெள்ளை நிற துணியில் மூன்று கிராம்பை போட்டு முடிச்சாக கட்டி அரிசி மூட்டையில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் தென்மேற்கு மூலையில் ஒரு இடத்தில் இந்த கிராம்பை வைக்கலாம். குபேர மூலை என்று சொல்லப்படும் தென்மேற்கு மூலையில் இந்த கிராம்பு வாசம் நிறைவாக இருக்கும் போது உங்களுடைய வீட்டிற்குள் பணத்தை ஈர்த்து கொடுக்கும்.

- Advertisement -

இன்று வெள்ளிக்கிழமையோடு செப்டம்பர் 1ம் தேதி பிறந்திருக்கின்றது. ஆகவே இந்த மாதம் முழுவதும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால், இன்றைய தினம் புதுசாக கல் உப்பு, மல்லிகைப்பூ, மஞ்சள், குங்குமம், துவரம் பருப்பு போன்ற பொருட்களில் உங்களுடைய வீட்டிற்கு எது தேவைப்படுகிறதோ அந்த பொருளை பணம் கொடுத்து கடையிலிருந்து வாங்கி வந்து அந்த பொருளைப் பிரித்து டப்பாவில் கொட்டி அதிலிருந்து சிறிதளவு எடுத்து சமையலுக்கு பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. அதிலும் இன்றைய தினம் உங்களுக்கு சம்பளம் வந்தால் அது மகாலட்சுமி அம்சம். அந்த பணத்திலிருந்து எடுத்து இப்படிப்பட்ட மங்களகரமான பொருட்களை வாங்கும் போது அந்த செலவு செய்த பணம், உங்களுக்கு வந்த வருமானமும் சேர்ந்து இரட்டிப்பாகும்.

இதையும் படிக்கலாமே: நாளை வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று இதை கொடுத்து வழிபாடு செய்து பாருங்கள். விரைவிலேயே உங்கள் இல்லத்தில் குழந்தை சத்தம் கேட்கும்.

இன்று மாலை பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்கு பாசிப்பருப்பில் கொஞ்சம் நெய் போட்டு மணக்க மணக்க பாயாசம் செய்து நிவேதனமாக வைத்து வழிபாடு செய்தால் வீட்டில் வருமானம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களின் மனது நிறைவாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் மனநிறைவோடு சந்தோஷமோடு இருந்தாலே அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் மகாலட்சுமி ஆசிர்வாதமும் நிறைவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவர்கள் இந்த வெள்ளிக்கிழமை மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம். இந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டை தவறவிட்டவர்கள் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும் நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -