கல்லாப்பெட்டியில் வெள்ளிக்கிழமை இந்த ஒரு பூவை வைத்தால் போதும். பல லட்சங்களை கொட்டிக் கொடுப்பாங்க மகாலட்சுமி.

mahalashmi4
- Advertisement -

பல லட்சங்களை கொட்டிக் கொடுத்தால் தான் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தேவி தங்கி இருக்கிறாள் என்று அர்த்தமா. நிச்சயமாக கிடையாது. அன்றாடம் மூன்று வேலை பசி இல்லாமல் சாப்பிட உணவை கொடுக்கின்றாள். இருப்பதற்கான வீடு கொடுத்திருக்கின்றாள். நம்முடைய மானத்தை மறைப்பதற்கு தேவையான ஆடைகளை கொடுத்திருக்கின்றாள். இது எல்லாம் மகாலட்சுமி தாயின் அருளால் தான் நமக்கு கிடைத்திருக்கின்றது. இதையெல்லாம் நாம் கேட்டா அந்த இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்றான். நமக்கு தேவையான விஷயங்களை அவனாக பார்த்து பார்த்து செய்கின்றான். ஆகவே, இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்று மனநிறைவு இல்லாமல் தேடி தேடி ஓடிக்கொண்டே இருக்காதீங்க.

முதலில் இருப்பதை வைத்து மனதளவில் நீங்கள் திருப்தி அடைய வேண்டும். பிறகு அந்த நிறைவான மனதோடு பரிகாரங்களை செய்யும் போது, வழிபாடு செய்யும்போது நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும். வருமானம் இல்லை பண கஷ்டம் கொண்டவர்கள் கடன் சுமை உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சொந்தத் தொழில் செய்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சின்னதாக கடை வைத்திருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம், கடையே இல்லை தள்ளு வண்டியை வைத்து தான் எங்களுடைய வியாபாரம் நடக்கிறது என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நல்ல பண வரவு வருவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். அது என்ன பரிகாரம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டிய மலர்:
வெள்ளிக்கிழமை என்றால் வீட்டில் எல்லோருக்குமே விளக்கு ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும் அல்லவா. அந்த பூஜையோடு சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு சதுர வடிவில் சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை தாமரைப் பூ ஒன்றை வாங்கி அந்த சிவப்பு துணிக்கு மேலே வைத்து மகாலட்சுமி தாயின் பாதங்களில் வைத்து, வருமானம் அதிகரிக்க வேண்டும். தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும். வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ எந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். வெண்தாமரை கிடைக்காத பட்சத்தில் வேறு தாமரை வாங்கிக் கொள்ளலாம்.

பிரார்த்தனை நிறைவடைந்த உடன் அந்த சிவப்பு துணியோடு சேர்த்து தாமரை பூவை எடுத்து வந்து தொழில் செய்யும் இடத்தில் கல்லாப்பெட்டியில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இந்த வெள்ளை நிற தாமரை பூவை, சிவப்பு நிற துணியோடு சேர்த்து கல்லாப்பெட்டியில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும்.

- Advertisement -

இதேபோல பூஜையை நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். ஆனால் அதற்கான வசதி உங்களுக்கு இருந்தால். வசதி இல்லாதவர்கள் வீட்டில் இருந்தே இந்த பூஜையை செய்து பூவை எடுத்துக்கொண்டு போய் கடையில் கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள். வீட்டில் வருமானம் தேவை என்பவர்கள் இந்த பூஜையை செய்து விட்டு, நம் வீட்டு பணப்பெட்டியிலும், இந்த தாமரை பூவை வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு ரூபாய் நாணயத்தை இத்துடன் சேர்த்து வரவேற்பறையில் வைத்துப் பாருங்கள் இந்த ரூபாய் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கக் கூடிய யோகத்தை உங்களுக்கு தேடி தரும்.

வாரம் ஒரு முறை அந்த பழைய பூவை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, துணியை துவைத்து மீண்டும் புது பூவை வாங்கி வைத்து பூஜை செய்து பரிகாரத்தை தொடரவும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வந்தாலே பணவரவில் நல்ல மாற்றம் வருவதை கண்கூடாக காண முடியும். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும்.

- Advertisement -