வளர்பிறை சதுர்த்தி திதி வழிபாடு

pillaiyar4
- Advertisement -

நாளைய தினம் விநாயகருக்கு உகந்த வளர்பிறை சதுர்த்தி திதி. அதாவது பௌர்ணமி முடிந்த ஐந்தாவது நாள் தேய்பிறை சதுர்த்தி திதி வரும். இதைதான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு செய்வோம். அதுவே அமாவாசை முடிந்து ஐந்தாவது நாள் வரக்கூடிய சதுர்த்தி திதியை, வளர்பிறை சத்தத்தை திதி என்று சொல்லுவோம். அதுதான் நாளைய தினம் வரவிருக்கின்றது.

இந்த சதுர்த்தி திதி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாளில் நாம் விநாயகர் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் நீங்கள் செய்ய வேண்டிய விநாயகர் வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில வழிபாட்டினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வளர்பிறை சதுர்த்தி திதி விநாயகர் வழிபாடு

இன்றே உங்களுடைய வீட்டையெல்லாம் சுத்தம் செய்து வைத்திருப்பீர்கள். ஏனென்றால் வழக்கம்போல வெள்ளிக்கிழமை என்றால் எல்லோர் வீடும் சுத்தபத்தமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள்.

உங்களால் முடிந்தால் சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும் என்றால், நாளை காலை முதலே வெறும் நீராகாரம் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் மூன்று வேலை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

நாளை மாலை உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி விநாயகரை மனப்பூர்வமாக வழிபாடு செய்து கொள்ளுங்கள். முடிந்தால் வீட்டில் இருக்கும் விநாயகருக்கு நாளை மாலை கொழுக்கட்டை நெய்வேதியமாக செய்து வையுங்கள். 8 கொழுக்கட்டை செய்து வைத்து, அந்த எட்டு கொழுக்கட்டையும் உங்கள் கையால் தானம் கொடுத்தால் நாளைய தினம் ரொம்ப ரொம்ப சிறப்பு.

வீட்டிலேயே ஒரு தேங்காயை எடுத்து சுத்தமாக கழுவி அதற்கு மஞ்சள் தடவி வச்சுக்கோங்க. இதை விநாயகர் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளிலும் அந்த தேங்காயை வைத்துக் கொண்டு, உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று விநாயகரை மூன்று முறை சுற்றிவர வேண்டும்.

- Advertisement -

பிறகு சூரை தேங்காய் உடைப்பதற்கு என்று கோவிலில் ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தில் நின்று அந்த தேங்காயை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி சிதறு தேங்காய் உடைத்து விடுங்கள். அவ்வளவுதான் உங்களுடைய பிரச்சனைகள் சுக்கு நூறாக உடைந்தது.

வீட்டில் இருந்து கிளம்பும்போது இந்த தேங்காயோடு நீங்கள் இன்னொரு பொருளையும் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் பண கஷ்டத்தை தீர்க்க போகும் பரிகாரம். பச்சை நிறத்தில் சின்னதாக சதுர வடிவில் ஒரு துணி எடுத்துக்கோங்க. அதில் ஐந்து ரூபாய் நாணயம் வையுங்க. ஒரு சின்ன விபூதி பாக்கெட் வச்சு, முடிச்சாக கட்டிக்கோங்க இதை விநாயகர் கோவிலில் இருக்கும், ஐயர் கையில் கொடுங்க. விநாயகரது பாதத்தில் இதை வைத்து அர்ச்சனை செய்து எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரவும். நாளைய தினமே வெள்ளிக்கிழமை இந்த முடிச்சை உங்களுடைய பீரோவில் வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு

விநாயகரே என்னுடைய கடன் பிரச்சனை தீரனும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று சொல்லி இந்த முடிச்சை உங்கள் பீரோவில் வைத்தால் பணம் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்து விநாயகரின் அருளை முழுமையாக பெறலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -