வெள்ளிக்கிழமை வீட்டில் ஒரு கட்டி கற்பூரத்தை இப்படி ஏற்றினால் கஷ்டங்கள் எல்லாம் இந்த நெருப்பில் பொசுங்கிப் போய்விடும். உங்கள் வீட்டில் அளவில்லா ஐஸ்வரியம் ஊற்றெடுக்கும்.

mahalashmi2
- Advertisement -

வீட்டில் இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை தோறும் இந்த ஒரு வழிபாட்டினை வீட்டில் செய்ய வேண்டும். நிலையான நிரந்தர வருமானம் இல்லாமல் கடன் வாங்கி கஷ்டப்படும் குடும்பத்தில் சீரான வருமானத்திற்கு வழி கிடைக்க, வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க, வீட்டை பிடித்த தரித்திரம் விலக, வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிலையாக தங்க, அஷ்ட ஐஸ்வர்யங்களை அப்படியே அள்ளி எடுத்துக்கொள்ள எல்லோராலும் சுலபமாக செய்து முடிக்க கூடிய ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இதோ உங்களுக்காக.

அஷ்ட ஐஸ்வரியம் பெருக வெள்ளிக்கிழமை வீட்டில் செய்ய வேண்டிய பூஜை:
வழக்கம் போலத்தான் வெள்ளிக்கிழமை என்றால் நம்முடைய வீடு சுத்தபத்தமாக இருக்கும். பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்து இருப்பீர்கள். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அந்த நேரத்தை தவறவிட்டவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு இந்த பூஜை செய்யலாம்.

- Advertisement -

பூஜைக்கு மகாலட்சுமிக்கு விருப்பமான இனிப்பு பிரசாதம் பால் பாயாசம் செய்து வைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காண்பிப்பதற்கு கட்டி கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். மெழுகு கற்பூரம் அல்ல. நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் இந்த பூங்கற்பூரம் என்று சொல்லப்படும் கட்டி கற்பூரம் கிடைக்கும். கொஞ்சம் பெரிய கட்டி கற்பூரமாக இருக்கட்டும். அதை ஏற்றி அதில் 5 கிராம்பை போட்டு, பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்திற்கு ஆரத்தி காண்பிக்க வேண்டும். முடிந்தால் இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க செய்யலாம்.

இந்த புகை வீடு முழுவதும் பரவி வீட்டில் இருக்கும் துர்சக்திகளை வெளியேற்றி விடும். பணக்கஷ்டத்தை கொடுக்கும் எல்லா துன்பமும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும். பணவரவு உண்டாக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கச் செய்யும் தன்மை கிராம்புக்கும் கட்டி கற்பூரத்திலிருந்து வெளிவரும் புகைக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த பூஜையின் போது கட்டாயமாக நீங்கள் கனகதாரா ஸ்தோத்திரத்தை உங்களுடைய வீட்டில் ஒலிக்க செய்ய வேண்டும். இப்போது கைபேசி வசதி எல்லோர் வீட்டிலும் இருக்கிறது. அதில் யூடியூபில் போட்டாலே கனகதாரா ஸ்தோத்திரம் உங்களுக்கு வந்து விடும். அதை வீட்டில் ஒலிக்க வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்களை ஏளனமாய் பார்த்தவர்கள் உதாசீனப்படுத்தியவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ இன்று இரவுக்குள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பிறகு இதை செய்தால் போதும்.

வீட்டில் வெள்ளிக்கிழமை இப்படியாக கட்டி கற்பூரத்தில் கிராம்பு போட்டு ஏற்றி கனகதாரா ஸ்தோத்திரத்தை ஒலிக்க செய்து மகாலட்சுமியை வழிபாடு செய்து வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்பதே இருக்காது. நிலையான நிம்மதியும் ஐஸ்வர்யமும் குடிகொள்ளும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -