பணவரவு அதிகரிக்க துளசி செடியில் நாணயத்தை வைத்து இப்படி பூஜை செய்யுங்கள். பணம் பலவழிகளில் வரும்.

cash thulasi
- Advertisement -

பணமே வாழ்க்கை இல்லை என்று நாம் எத்தனை தான் பேசினாலும் பணம் இல்லாத ஒரு வாழ்க்கையும் நம்மால் வாழ முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இந்த உலகில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் பணம் ஒரு முக்கிய கருவியாக செயல்படுகிறது. அந்த பணத்தை நம் வசப்படுத்துவதற்கான ஒரு எளிய பரிகாரத்தை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணவரவு தாராளமாக இருக்க

நம் பழங்காலம் முதல் இன்று வரை நம்முடைய வழக்கத்தில் துளசிச் செடியை வைத்து பூஜை செய்யும் முறை உள்ளது. செடிகளிலே இந்த துளசியானது புனிதத் தன்மை வாய்ந்ததாகவும் தெய்வ சக்தி நிறைந்ததாகவும் நாம் போற்றி பாதுகாத்து வணங்கி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே.

- Advertisement -

அப்படியான இந்த துளசி செடியை நம் வீட்டில் முறையாக வைத்து வழிபடும் போது நம் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் கிடைக்கும். தாயாரின் அனுகிரம் பரிபூரணமாக இருப்பின் அங்கு பண வரவிற்கு தடையில் இருக்காது. இப்போது பண வரவிற்கு இந்த துளசி செடியை எப்படி பூஜிப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த பூஜை செய்ய நம் வீட்டில் துளசி செடி கட்டாயம் இருக்க வேண்டும் இல்லை எனில் வாங்கி வைத்து விடுங்கள். அதே போல் இந்த பரிகாரத்தை அமாவாசை நாளில் செய்வது மிகவும் சிறப்பு. இந்த பூஜை செய்ய நமக்கு சுத்தமான பசும்பால் பத்து ரூபாய் நாணயம் இது இரண்டும் இருந்தால் மட்டும் போதும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு சுத்தமான எச்சில் படாத டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு முடிந்த வரையில் கண்ணாடி டம்ளரை பயன்படுத்துவது நல்லது. இதில் சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீரும் எச்சில் படாமல் இருக்க வேண்டும். இந்த தண்ணீரில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பசும்பாலை ஊற்றுங்கள். இப்போது தண்ணீருடன் பால் நன்றாக கலந்து விடும்.

துளசி செடிக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து கொஞ்சம் மல்லிகை மலரை துளசி செடியின் அடியில் வைத்து விடுங்கள். அதன் பிறகு ரூபாய் நாணயத்தை துளசி செடியின் அடியில் வைத்தப் பிறகு இந்த பால் கலந்த தண்ணீரை மேலிருந்து அபிஷேகம் செய்வது போல ஊற்றுங்கள். இந்த தண்ணீர் வந்து ரூபாய் நாணயத்தின் மீதும் பட வேண்டும்.

- Advertisement -

இப்படி அபிஷேகம் செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த நாணயத்தை எடுத்து நல்ல விதமான செலவிற்கு பயன்படுத்துங்கள். இதே போல அமாவாசை தோறும் நாணயத்தை வைத்து இப்படி பூஜை செய்த பிறகு செலவு செய்யும் போது அந்த பணம் பல மடங்காக நமக்கு திரும்ப வரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்காலமே: இந்தப் புகையை வாரத்திற்கு ஒரு முறை போடுவதன் மூலம் பகைகள் அனைத்தும் ஓடிவிடும்.

அதுமட்டுமின்றி அமாவாசையில் துளசி செடிக்கு செய்யப்படும் இந்த பூஜையானது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வீட்டிலும் பணவரவு தடை இன்றி அதிகரிக்கும். இந்த வழிபாட்டு பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -