வேரில் இருந்து முடியை வேகமாக வளர்த்து வெளியே இழுத்து தள்ளி விட கூடிய சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. வெறும் 7 நாட்களில் முடி வளர்ச்சியை பார்த்து அசந்து போவிங்க.

hair8
- Advertisement -

இந்த 1 பொருளுக்கு முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய சக்தி ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த பொருளை பற்றி நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சொன்ன கட்டாயம் நீங்கள் நம்பவே மாட்டீர்கள். உங்களுடைய முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு எத்தனையோ வழிகளை நீங்கள் பின்பற்ற இருக்கலாம். ஆனால் முடி வளரவே இல்லை என்று கவலைப்படுபவர்கள் இந்த குறிப்பையும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. இந்த குறிப்பை பின்பற்றத் தொடங்கிய சரியாக 7 நாட்களில் உங்களுடைய முடி வேர்க் கால்களில் இருந்து வலுவாக வளரத் தொடங்கிவிடும்.

அச்சச்சோ அப்படி என்றால் நிறைய செலவு செய்ய வேண்டுமோ? அப்படி என்று கவலைப்படாதீர்கள். தேங்காய் எண்ணெயும், தேங்காய் எண்ணெயோடு இந்த ஒரு பொருளையும் சேர்த்தாலே போதும். அது எந்த 1 பொருள். நேரத்தைக் கடத்தாமல் குறிப்புகள் சென்று பார்ப்போமா.

- Advertisement -

இந்தப் பொருள் நாட்டு மருந்து கடைகளில் மலிவாக கிடைக்கும். இதனுடைய பெயர் வேம்பாலம் பட்டை. இது ஒரு மரத்திலிருந்து எடுக்கக்கூடிய மூலிகைப் பொருள் தான். இயற்கையாக நமக்குக் கிடைக்கக் கூடிய ஒன்று. ஆகவே இதை தலையில் போடுவதன் மூலம் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் வந்து விடுமோ என்று பயப்பட தேவையில்லை. இந்த பட்டையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோமா.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 8 லிருந்து 10 வேம்பாலம் பட்டை துண்டுகளை எடுத்து போட்டுக்கொள்ளுங்கள். இதில் 250ml அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி இரவு முழுவதும் நன்றாக ஊறவைத்து விடுங்கள். இந்தப் பட்டையானது தேங்காய் எண்ணெயில் ஊற ஊற எண்ணெய் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். ஒரு நாள் இரவு முழுவதும் இந்த பட்டை எண்ணெயில் ஊறிய பின்பு இதை அப்படியே ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எண்ணெயை தினந்தோறும் அப்படியே உங்களுடைய தலையில் தேய்த்து வர வேண்டியது தான். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இல்லை என்றால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை நன்றாக தலையில் வைத்து 10 நிமிடங்கள் போல மசாஜ் செய்யவேண்டும். ஏதோ எண்ணெய் வைத்தோம் விட்டோம் என்று இல்லாமல் கொஞ்சம் கவனமாக ஸ்கால்ப்பில் படும்படி எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது நமக்கு இரட்டிப்பு பலன் சீக்கிரமே கிடைக்கும்.

இரவு இந்த எண்ணெயை தலையில் வைத்து விட்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளித்து விடலாம். அப்படி இல்லை என்றால் 2 மணி நேரம் இந்த எண்ணெயை தலையில் ஊற வைத்து தலைக்கு குளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வாரத்தில் 3 நாட்கள் இப்படி செய்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பவர்கள் என்றால் கவலையே வேண்டாம். தினம்தோறும் இந்த எண்ணெயை உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பது போலவே வைத்து வரலாம்.

7 லிருந்து 10 நாட்களில் நீங்கள் நிச்சயமாக நம்பவே மாட்டீங்க உங்களுடைய முடி ஒரு இன்ச் அளவு வளர்ந்து இருக்கும். இதே எண்ணெயை முன் நெற்றியில் இருக்கும் வழுக்கையில் தடவி வாருங்கள். மூன்றே மாதத்தில் முடி வளராத இடத்தில் கூட முடி வளர்வதை உங்களால் பார்க்க முடியும். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக ஏமாற்றம் இருக்காது. இந்த எண்ணெயை இத்தனை நாட்கள் தான் பயன்படுத்த வேண்டும். மீண்டும் நிறுத்த வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

- Advertisement -