வீட்டில சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கும் வறுமை, பீடை, கஷ்டம், துன்பம், சண்டை அனைத்தும் இந்த 1 பொருளை பார்த்தவுடன் தலைதெறிக்க எழுந்து வெளியே ஓடிவிடும். வரவேற்பறையில் இதை மட்டும் வச்சு பாருங்க.

cash-question
- Advertisement -

நிறைய பேர் வீட்டில் அப்படி ஒரு சந்தோசம் நிறைவாக இருக்கும். குடும்பத்தில் உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்து செல்வார்கள். சண்டை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. வீட்டில் மகாலட்சுமி நிறைவாக அமர்ந்திருப்பாள். ஆனால் திடீரென்று பூகம்பம் வந்தது போல கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைய தொடங்கும். மாமியார் மருமகள் கருத்து வேறுபாடு. கணவன் மனைவிக்குள் சண்டை. நம் வீட்டுக் குழந்தை திடீரென்று கீழே விழுந்து கை காலில் ரத்த காயம் படும். சொல்பேச்சு கேட்டு வந்த குழந்தை திடீரென்று அடாவடி பண்ணும். வீட்டில் திடீர் பண கஷ்டம் படையெடுக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலும் கண் திருஷ்டியும் ஒரு காரணம்தான்.

நிம்மதியாக இருந்த குடும்பம் திடீரென்று நிலைகுலைந்து போக காரணமாக இருக்கும் இந்த எதிர்மறை ஆற்றலை தடுக்க மிக மிக சுலபமான ஒரு தாந்திரிக முறை உள்ளது. சிறிய மண் பானை அல்லது மண் அகல் விளக்கு எல்லோர் வீட்டிலும் இருக்கும். அதை வேண்டுமென்றாலும் பரிகாரத்திற்க்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் கொஞ்சமாக 1 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயத்தைப் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து விடுங்கள். ஏதாவது ஒரு அலமாரியின் மேலே யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்தால் கூட பரவாயில்லை. அது அப்படியே இருக்கட்டும். தினம்தோறும் லேசாக அதன்மேலே தண்ணீரை மட்டும் தெளித்து வர வெந்தயம் முளை விடத் தொடங்கும்.

ஒரு வாரம் முழுவதும் அந்த மண் பாண்டத்தில் வெந்தயம் அப்படியே இருக்கட்டும். எவ்வளவு தூரம் வெந்தயம் முளைத்து வந்தாலும் சரி, ஈரப்பதத்தோடு முளைத்து வரக்கூடிய வெந்தயமானது உங்களுடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை வினைகளையும் ஆற்றலையும் கண்திருஷ்டியையும் உடனடியாக தனக்குள்ளே ஈர்த்துக்கொள்ளும்.

- Advertisement -

திடீரென்று உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவு மன நிம்மதி இல்லை என்றால் இதை வைத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வந்த கஷ்டங்கள் அனைத்தும் ஒரு சில நாட்களிலேயே காணாமல் போய்விடும். வாரத்தில் ஒருநாள் பழைய வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் அந்த மண் அகல் விளக்கில் புதிய வெந்தயத்தை கொட்டி வைத்தால் உங்கள் வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும்.

பணக்கஷ்டம் ஆக இருக்கட்டும். மன கஷ்டமாக இருக்கட்டும். உறவுகளுக்குள் இருக்கும் பிரிவினை குழந்தைகளின் சந்தோஷம் எல்லாம் உங்கள் வீட்டில் நிறைவாக இருக்க, சுலபமான இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து அனைவரும் பலன் அடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -