வேண்டுதல் நிறைவேற தேய்பிறை சஷ்டி வழிபாடு

muruan vazhaipazh dheepam
- Advertisement -

முருகப்பெருமான் வழிபாட்டிற்கென சில நாட்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அது ஒவ்வொரு வாரத்தில் வரக் கூடிய செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். அது மட்டும் இன்றி நட்சத்திர வழிபாடு உண்டு. அது ஒவ்வொரு மாதத்தில் வரக் கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று வழிபடுவது

இவை அனைத்திலும் விட திதி வழிபாடு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அது மாதத்தில் வரக் கூடிய சஷ்டி திதி. இது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு சஷ்டிகள் வரும். ஒன்று தேய்பிறை சஷ்டி மற்றொன்று வளர்பிறை சஷ்டி. இது தேய்பிறை சஷ்டி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அப்படியான தேய்பிறை சஷ்டி நாளைய தினம் 1.2.2024 வியாழக்கிழமை வந்திருக்கிறது.

- Advertisement -

அன்றைய நாளில் நாம் முருகருக்கு ஏற்ற இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேற சஷ்டி தீபம்

இந்த தீப வழிபாடு செய்யும் நாளில் அசைவம் சாப்பிட கூடாது. சஷ்டி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேளையிலே பூஜை அறையில் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வேண்டி அன்றைய தின விரதத்தை தொடங்கலாம். உண்ணாமல் விரதம் இருந்து வேண்டினால் நல்ல பலனை பெறலாம். முடியாதவர்கள் உண்ணா விரதத்தை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு தீப வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு இரண்டு வாழைப்பழங்கள் மட்டும் தேவை. ஒரு சிறிய தட்டில் இரண்டு வாழைப்பழத்தை வைத்து விடுங்கள். அந்த பழத்தின் நடுவில் கட்டமாக கொஞ்சம் வெட்டி எடுத்து விடுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றங்கள்.

இந்த தீபம் ஏற்றும் போது முருகருக்கு எளிய நெய் வைத்தியத்தை செய்து வைத்து விடுங்கள். எப்போதும் முருகர் வழிப்பாட்டுக்கு செய்வது போல வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து அத்துடன் சேர்த்து இந்த தீபத்தையும் ஏற்றி முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த விரதத்தை தொடங்கும் நாள் தேய்பிறை சஷ்டியில் தொடங்குங்கள். அதன் பிறகு வளர்பிறை சஷ்டியிலும் இதே தீபத்தை ஏற்றி வரலாம். இந்த தீப வழிபாடு தொடர்ந்து செய்து வரும் போது நீங்கள் வேண்டும் யாவும் நிச்சயம் உங்கள் கை கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: யோகம் வர பரிகாரம்

குறிப்பாக திருமண தடை குழந்தை பேரு இல்லாதவர்கள் இந்த வழிபாடு செய்யும் போது நிச்சயம் கந்தன் அருளால் நல்ல பலனை பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -