வெள்ளிக்கிழமை ஒரு சொம்பு தண்ணீரை வடகிழக்கு மூலையில் இப்படி வைத்தால் போதும். தீர்க்க முடியாத பிரச்சனைகள் சிக்கல்கள் கஷ்டங்கள் எல்லாவற்றிற்கும் சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும்.

sembu-sombu-salt
- Advertisement -

அவிழ்க்கவே முடியாத முடிச்சை போட்டுவிட்டு, அதை நாம், எப்படி அவிழ்க்கின்றோம் என்று வேடிக்கை பார்ப்பதில் இறைவனுக்கு ஒரு பேரானந்தம். அதாவது, தீர்க்கமுடியாத கஷ்டத்தை நமக்கு கொடுத்து விட்டு, இந்தக் கஷ்டத்திலிருந்து இவன், எப்படி வெளி வருகின்றான் என்பதை அந்த இறைவன் பார்த்துக் கொண்டே இருப்பான். கஷ்டப்படும் நேரத்தில் நாம் நேர்மையாக தர்மவழியில் பயணத்து விட்டால், வாழ்க்கையில் ஜெயித்து விட்டோம். கஷ்டம் வருகிறதே என்று குறுக்கு வழியில் சென்றால் சிக்கிக் கொள்வோம். தவறு செய்ததற்கான தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

வெள்ளிக்கிழமை அன்று நம் குடும்ப கஷ்டங்கள் தீர ஒரு சிறப்பான பரிகாரத்தை பற்றி தான் இன்றைக்கு நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். வெள்ளிக்கிழமை காலை உங்கள் வீட்டு வழக்கபடி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு எச்சில் படாத ஒரு சொம்பு நிரம்ப தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த உலோகத்தில் செய்யப்பட்ட சொம்பாக இருந்தாலும் சரி.

- Advertisement -

அந்தத் தண்ணீரில் ஒரு சிறிய கல் உப்பு, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, போட்டுக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை பூஜை அறையில் வைத்து விட்டு, பிரபஞ்சத்திடம் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரிடம் மனதார உங்கள் கஷ்டங்களை உரையாடி சொன்னால், அந்த தண்ணீருக்கு கேட்கும். அந்த தண்ணீர் உங்கள் பிரச்சனைகளை காதில் வாங்கிக்கொண்டு, பிரபஞ்சத்திடம் கொண்டு போய், அந்த பிரச்சனைக்கான தீர்வையும் கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த ஒரு சொம்பு தண்ணீரிடம் உங்கள் கஷ்டங்களை மனசுக்குள் சொன்னாலும் சரி, அல்லது வாய்விட்டு கஷ்டங்களை தண்ணீரிடம் சொன்னாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். இப்போது பூஜை அறையில் உங்களுடைய வேண்டுதலை சொம்பு தண்ணீரிலும் சொல்லி முடித்து விட்டீர்கள். அந்த சொம்பை கையோடு எடுத்துக் கொண்டுவந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்த கையுடன் சேர்த்து இந்த வேலையையும் நீங்கள் முடித்துவிடவேண்டும். அதாவது காலை 7.00 மணிக்கு முன்பு இதெல்லாம் நீங்கள் செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று மதியம் 11.45 மணியிலிருந்து 12.15 க்குள் இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்து தொட்டியில் செடி வைத்திருந்தால் அந்த இடத்தில் தண்ணீரை ஊற்றி விடலாம். (மதியம் குறிப்பிட்ட இந்த நேரத்தில் அபிஜித் முகூர்த்தம் வருவதால் அந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த பரிகாரம் உங்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும்.) உங்கள் வீட்டின் அருகில் மரம் ஏதாவது இருந்தால் அந்த மரத்திற்கு இந்த தண்ணீரை ஊற்றலாம். எதுவுமே இல்லையென்றால் மொட்டை மாடி போன்ற வெட்டவெளியில் இந்த தண்ணீரை ஊற்றி விட வேண்டும்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால் உங்களுடைய பிரச்சனைகளை இந்தப் பிரபஞ்சம் தெரிந்து கொள்ள, இந்த தண்ணீர் உதவியாக நிற்கும். தண்ணீரை வெளியில் கொண்டு சென்று ஊற்றும் போது உங்களுடைய குறிப்பிட்ட அந்த கஷ்டத்தை நினைத்து கொள்ளுங்கள். அந்த கஷ்டம் எனக்கு சீக்கிரம் தீர வேண்டும். அந்த கஷ்டத்திற்கு எனக்கு சீக்கிரம் விடிவு காலத்தை இந்த பிரபஞ்சம் காட்ட வேண்டும், என்று சொல்லிக்கொண்டே தண்ணீரை ஊற்றுங்கள். வானம் பார்த்த வெட்டவெளியில் தண்ணீர் ஊற்றப்பட வேண்டும். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சமே ஏற்றுக்கொண்டு அதற்கான விடிவு காலத்தை கொண்டு வந்து சேர்க்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -