உங்களின் வேண்டுதல் நேரடியாக இறைவனின் காதில் விழும். இப்படி ஒரு முறை வேண்டுதல் வைத்து பாருங்கள்.

pillaiyar-prayer
- Advertisement -

இறைவனிடம் நம்முடைய வேண்டுதலை எப்படி வைக்க வேண்டும். உடல் தூய்மையோடு சேர்ந்த மனத்தூய்மையுடன், எந்தவிதமான சுயநலமும் பேராசையும் இல்லாத உண்மையான பக்தியோடு வைக்கக்கூடிய வேண்டுதல் என்பது உடனடியாக பலிக்கும். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இறை வழிபாட்டிற்கு தேங்காய், பூ, பழம், கற்பூரம், தீபம், நிவேதியம் இந்தப் பொருட்கள் எல்லாம் இல்லாமல் கூட இறைவழிபாடு செய்யலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல், பக்தி இல்லாமல், மனதில் தூய்மை இல்லாமல் நிச்சயமாக நம்மால் இறைவழிபாடு செய்ய முடியாது. நம்பிக்கை இல்லாமல், மனதில் பொறாமையுடனும் கெட்ட எண்ணத்தோடும் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு பலனையும் தராது என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவினை தொடர்வோம்.

vetrilai

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். என்னதான் இறைவழிபாடு செய்வதற்கு தூய்மையான மனது மட்டும் இருந்தால் போதும் என்று சொன்னாலும், மனிதர்களாக பிறந்த நமக்கு ஒரு மனநிறைவு ஏற்பட, மன திருப்தி ஏற்பட, இறைவனுக்காக நாம் சில விஷயங்களை செய்தாக வேண்டியிருக்கிறது. அந்த வரிசையில் சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அந்த காலத்தில் சித்தர்கள் தங்களுக்கு வேண்டிய வரங்களை இறைவனிடம் இருந்து இந்த முறையிலும் பெற்று வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முதலில் சுத்தமான வெற்றிலை 3, எலுமிச்சம்பழம் 1, வாங்கி வந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

lemon

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட்டு, சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பூஜையை செய்ய வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். மூன்று வெற்றிலைக்கு நடுவே எலுமிச்சம் பழத்தை வைத்து, வெற்றிலைகளை அப்படியே மடித்து உள்ளங்கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். உள்ளங்கைகளில் வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் இருக்கட்டும். நேர்மறையாக உங்களுடைய வேண்டுதலை, உங்களுடைய எண்ணங்களை இறைவனிடம் சொல்லவேண்டும். எதிர்மறையான வார்த்தைகளை உபயோகப் படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

pray

எடுத்துக்காட்டுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் ‘நல்ல மனைவி உங்களுக்கு கிடைக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பணப் பிரச்சனை இருந்தால், ‘நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படியாக உங்களுக்கு எந்த வரம் வேண்டுமோ அந்த வரத்தினை கேளுங்கள்.

- Advertisement -

prayer

வேண்டுதலை முடித்துவிட்டு எலுமிச்சம் பழத்தையும் வெற்றிலையையும் பூஜை அறையில் வைத்து விடுங்கள். வெற்றிலை காய்ந்து போவதற்கு முன்பு எடுத்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் ஆடு மாடுகளுக்கும் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் வெளியாட்கள் போடும் படியாக இருந்தால் வயதானவர்களுக்கு கொடுத்துவிடலாம் தவறில்லை.

உங்கள் கையில் இருந்த எலுமிச்சம் பழத்தை மட்டும் பூஜை அறையிலேயே வைத்துவிடவேண்டும். இறுதியாக இறைவனுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய நேர்மறை எண்ணங்களை அந்த எலுமிச்சம்பழம் உள்வாங்கி இருக்கும். இந்த எலுமிச்சம் பழத்தை பூஜையறையில் வைத்தால், அது அழுகி போகாது. காய்ந்து போகுமே தவிர நிச்சயமாக அழுகி போகாது. உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் வரை அந்த எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலேயே வைத்திருக்க வேண்டும்.

தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றும் போது அந்த எலுமிச்சம் பழத்திற்கு தூபம் காட்டி விடுங்கள். தினமும் மனதார உங்களுடைய வேண்டுதலை பூஜையறையில் சொல்லிக் கொண்டே வாருங்கள். சீக்கிரமே கூடிய விரைவிலேயே உங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

உங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் காய்ந்த எலுமிச்சம்பழத்தை கால் படாத இடத்தில் எடுத்து போட்டு விடலாம். வெற்றிலையோடு சேர்ந்த எலுமிச்சம் பழத்திற்கு எப்போதுமே ஒரு அதீத சக்தி உண்டு. வெற்றிலை, எலுமிச்சம் பழத்தையும் கையில் வைத்து, நீங்கள் இறைவனிடம் கேட்டவரம் நிச்சயம் கூடிய விரைவிலேயே உங்களை வந்தடையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -