கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி குங்குமத்தை இப்படி நெற்றியில் இட்டுக்கொண்டால், நீங்க வேண்டிய வேண்டுதல் அப்படியே உடனடியாக நடக்கும்.

thilagam
- Advertisement -

நம்மில் பலபேர் கோவிலில் கொடுக்கும் விபூதி குங்குமத்தை வாங்கி அதிலிருந்து நெற்றிக்கு தேவையான அளவு இட்டுக்கொண்டு மீதம் இருக்கும் விபூதி குங்குமத்தை அங்கு இருக்கும் ஏதாவது ஒரு கிண்ணத்தில் கொட்டிவிட்டு வருவோம். சிலர் பேப்பரில் மடித்து அதை பிரசாதமாக வீட்டிற்கு கொண்டு வருவவோம். இதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், ஒரு சிலருக்கு கையில் வாங்கிய பிரசாதத்தை கோவிலில் ஆங்காங்கே சுவற்றின் மேலே கொட்டிவிட்டு வரும் பழக்கமும் இருக்கின்றது. சுத்தமாக இருக்கக்கூடிய கோவிலை அசுத்தப் படுத்தும் விதத்தில் ஆங்காங்கே இப்படி விபூதி குங்கும பிரசாதத்தை கொட்டுவது என்பது தவறான விஷயம். இந்த பழக்கம் உங்களிடத்தில் இருந்தால் அதை இனி திருத்திக் கொள்ளுங்கள்.

இறைவனின் பாதங்களில் வைத்து பூஜை செய்த இந்த விபூதி குங்குமத்தினை பிரசாதமாக பெறுவதே நமக்கு கிடைத்த ஒரு பாக்கியம் தான். இறை சக்தி நிறைந்த இந்த விபூதி குங்குமத்தை கோவிலில் நம் கைகளில் கொடுத்து விட்டார்கள். அதை நம் நெற்றியில் இட்டுக்கொண்டு, மீதமிருக்கும் விபூதி குங்குமத்தை வைத்து ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கோவிலுக்கு செல்லும் போதே ஒரு அரச இலையை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். நிறைய கோவில்களிலேயே அரசமரம் இருக்கும். நீங்கள் செல்லும் கோவிலில் அரசமரம் இருந்தால் அந்த மரத்திலிருந்து கூட ஒரு இலையை பறித்து வைத்துக் கொள்ளலாம். கோவிலில் கொடுத்த விபூதி குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொண்டு மீதம் இருக்கக்கூடிய விபூதி குங்கும பிரசாதத்தை இந்த அரச இலையில் கொட்டி கொள்ளுங்கள்.

poovarasa-ilai

அப்படியே கோவிலில் அமர்ந்து, இந்த அரச இலையில் கொட்டிய விபூதி குங்குமத்தில் உங்களுடைய ஆள்காட்டி விரலால் உங்களுடைய வேண்டுதலை எழுதவேண்டும். சிறிய இலை தான், நம் கையில் இருப்பது மிகச்சிறிய அளவிலான விபூதி குங்குமம் தான். இருப்பினும் அந்த விபூதி குங்குமத்தில் உங்களுடைய ஆள்காட்டி விரலால் உங்களுடைய கோரிக்கையை எழுதி அந்த இலையை அப்படியே மடித்து உங்களுடைய பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து, வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

எடுத்துக்காட்டிற்கு ‘கடன் பிரச்சனை தீர’ என்று அந்த இலையில் எப்படி எழுதுவது. ஒரு எழுத்தை எழுதி விட்டு, அந்த எழுத்திற்கும் மேலேயே இன்னொரு எழுத்தை எழுதலாம். நாம் எழுதுவது நமக்கு புரிந்தால் போதும். அந்த இலையில் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

arasa-ilai

வீட்டிற்கு வந்தவுடன் அரச இலையில் இருக்கும் விபூதி குங்குமத்தை ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினம்தோறும் அதை நெற்றியில் இட்டு வர, உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவிலேயே நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை பயன்படுத்திய அரச இலையை மீண்டும் இரண்டு மூன்று முறை பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. அரச இலை வாடிய பின்பு அதை எடுத்துப் போட்டுவிட்டு புதியதாக அரசை இலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

kadan

எப்போதும் இந்த பரிகாரத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. குறிப்பிட்ட பிரச்சினைக்காள் சரியாக தொடர்ந்து ஒரு 5 முறை, 11 முறை என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

thilagam1

எடுத்துக்காட்டிற்கு வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை நீங்கள் கோவிலுக்கு செல்வீர்கள். 5 வெள்ளிக் கிழமைகள், மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பாருங்களேன். நிச்சயமாக நீங்கள் நம்ப முடியாத நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -