உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு கட்டிப்போட்டு பாருங்கள். உங்களுடைய வேண்டுதலுக்கு உடனே உயிர் கிடைக்கும்.

hanuman
- Advertisement -

சில பேருடைய வேண்டுதலுக்கு உயிர் இருக்கவே இருக்காது. அப்படி என்றால் என்ன அர்த்தம். சில பேருக்கு இறைவனிடம் வைத்த வேண்டுதல் பலிக்காது. சில பேர், இந்த நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்த உடனேயே, அந்த வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி வைத்து விடுவான். இது எப்படி சாத்தியம். ‘ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் இறைவன் வித்தியாசம் காட்டுகின்றானா? ஒரு மனிதன் நினைப்பது உடனடியாக நடக்கிறது. இன்னொரு மனிதன் நினைப்பது ஒரு வருடம் கழித்து கூட நடக்கவில்லை.’ இப்படி பாகுபாடு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி மனிதராகப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் நிச்சயம் எழும்.

கேட்ட வரங்கள் கிடைப்பதற்கும், கேட்ட வரங்கள் கிடைக்காமல் போவதற்கும், காரணம் அவரவருடைய கர்ம வினை தான். ஒருவருடைய தலையெழுத்து என்பது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது. அந்த தலையெழுத்தை நிச்சயமாக அந்தக் கடவுளே நினைத்தாலும் மாற்றி எழுத முடியாது. ஆனால் நம்முடைய தவறை உணர்ந்து, இறைவனிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்கும் போது, வரக்கூடிய துன்பத்திலிருந்து நம்மை கை தூக்கி விட அந்த இறைவன் நிச்சயமாக வருவான். இனி கஷ்டப்பட்ட காலம் எல்லாம் கடந்து போகட்டும், வரக்கூடிய காலத்திலாவது நல்ல மனிதராக வாழும் வாய்ப்பை அந்த கடவுள் ஏற்படுத்தி தருவான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- Advertisement -

கஷ்டங்கள் தீர, வேண்டுதல் நிறைவேற கிராம்பு மாலை பரிகாரம்:
என் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. என்று எதிர்மறையாக யாரும் நினைக்க வேண்டாம். கடவுள் நினைத்தால் உங்கள் தலைவிதையை நிச்சயம், சரி செய்ய முடியும். அதற்கான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். கிராம்பு 57, 108 உங்களால் எத்தனை முடியுமோ அத்தனை கிராம்புகளை வாங்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதல், ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கும் அல்லவா, அந்த வேண்டுதலை இறைவனிடம் சொல்லி இந்த கிராம்பு மாலையை உங்கள் கையால் கட்டலாம் அல்லது ஊசியால் கோர்க்கலாம். உங்கள் சௌகரியம்.

கிராம்புகள் உடையாமல் இருக்கட்டும். கட்டிய இந்த கிராம்பு மாலையை ஆஞ்சநேயர் கோவிலுக்கு கொண்டு போய் அனுமனுக்கு சாத்தலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் சுவாமி படங்களுக்கே போட்டு வைக்கலாம். நீங்கள் எதை மனதில் நினைத்து இந்த க்ராம்பு மாலையை தொடுத்தீர்களோ, அந்த வேண்டுதலை இறைவன் நிச்சயம் நிறைவேற்றி வைப்பான். உங்களுடைய வேண்டுதலுக்கு கூடிய சீக்கிரம் உயிர் கொடுப்பான். அதற்காகத்தான் இந்த கிராம்பு மாலை பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வேண்டுதலுக்கு இத்தனை நாள் செவிசாய்க்காத இறைவனை கூட வசியம் செய்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள தாந்திரீகம் சார்ந்த, ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம் இது.

- Advertisement -

கடன் தொல்லை தீர வேண்டுமா, நல்ல வரன் அமைய வேண்டுமா, வருமானம் அதிகரிக்க வேண்டுமா, நல்ல வேலை கிடைக்க வேண்டுமா, நோய் நொடி சரியாக வேண்டுமா, என்ன வரம் வேண்டும் உங்களுக்கு அதை மனமுருகி இறைவனிடம் கேளுங்கள்.

இதையும் படிக்கலாமே: 10 தலைமுறைக்கு பஞ்சமே இல்லாமல் தங்கம் உங்கள் வீட்டில் தங்க வேண்டுமா? தென்மேற்கு மூலையில் எப்போதும் இந்த முடிச்சை கட்டி வையுங்கள்.

இந்த கிராம்பு மாலையை தொடுக்கும்போது ஆத்மார்த்தமாக இந்த பிரபஞ்சத்திடம் உங்களுடைய வேண்டுதலை சொல்லுங்கள். இந்த கிராம்பு உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடமும், இறைவனிடமும் சீக்கிரம் கொண்டு போய் சேர்த்து அதற்கான உயிர் கொடுக்கும் வேலையை செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் பெரலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -