பிரச்சனை தீர வாராகி வழிபாடு

varahi dheepam
- Advertisement -

மனிதர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினையை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க வழி கிடையாது. ஏனென்றால் அப்படியான ஒரு காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சிலருக்கு சதா சர்வ காலமும் பிரச்சனையாகவே இருக்கும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.

இப்படி பிரச்சனையுடனே வாழ்பவர்கள் ஒரு புறம் இருக்க, இன்னும் சிலரோ வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வார்கள். இதற்கு யாரிடம் சென்று உதவி கேட்பது என்று கூட அவர்களால் யூகிக்க முடியாது. இப்படியானவர்கள் அன்னையை நினைத்து இந்த தீப வழிபாடு செய்தால் நிச்சயம் அந்த பிரச்சனை தீரும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையினை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர வாராகி தீப வழிபாடு

இந்த வழிபாடு செய்வதற்கு நீங்கள் எந்த நாளை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அன்னைக்கு உகந்த பஞ்சமி திதியில் இந்த வழிபாட்டை துவங்கினால் இன்னும் நல்லது. இந்த வழிபாட்டை கோவிலில் தான் செய்ய வேண்டும். வீட்டில் செய்தால் அத்தனை சிறந்த பலனை தராது.

இந்த வழிபாடு செய்வதற்கு நாம் தினமும் அன்னைக்கு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றக் கூடிய முறை தான் சற்று வித்தியாசமானது எப்போதும் நாம் வாராகி அன்னைக்கு பஞ்சமுக தீபத்தை தான் ஏற்றுவோம் இந்த வழிபாட்டிற்கு நாம் அன்னைக்கு மா விளக்கு ஏற்ற வேண்டும். இதற்கு அரிசி மாவினால் செய்த இரண்டு மாவிளக்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த திரி போடும் முறையும் மிகவும் முக்கியம். பொதுவாக நாம் தீபம் ஏற்ற இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து ஒரே திரியாக போடுவோம். இந்த தீப வழிபாட்டிற்கு ஒரு மாவிளக்கில் இரண்டு திரி போட வேண்டும்.

அதாவது நான்கு பஞ்சு திரியை இரண்டாக மாற்றி ஒரு மாவிளக்கில் போட வேண்டும் இப்படியாக இரண்டு மாவிளக்கு தீபத்தை அன்னைக்கு ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றும் போது அன்னைக்கு ஏதேனும் ஒரு நெய்வேத்தை கட்டாயமாக வைக்க வேண்டும். அது மிக எளிமையாக மாதுளை முத்துக்கள், பால், வேர்க்கடலை, பொட்டுக்கடலை இப்படி வைக்கலாம். கோவிலில் ஏற்றும் போது இந்த விளக்கை ஏற்றி விட்டு அப்படியே வைத்துவிட்டு பிரசாதத்தை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் அருகில் வாராகி அன்னை ஆலயம் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் வேறு வழி இல்லை வீட்டில் ஏற்றுங்கள். ஆலயம் சென்று வழிபடுவதை விட சற்று தாமதமாக பலன் கிடைக்கும். ஆனால் அருகில் ஆலயம் இருந்து ஏற்றாமல் இருந்தால் நிச்சயம் இந்த வழிபாடு பயன் தராது.

வீட்டில் ஏற்றும் பொழுது இந்த மாவிளக்கு நீங்கள் பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள். இந்த வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பெண்களுக்கு இடையே மாதவிலக்கு காலங்கள் வந்தால் அந்த நாட்களை தவிர்த்து விட்டு தொடர்ந்து ஏற்றலாம்.

ஆண்கள் இந்த வழிபாடு செய்யும் போது முடிந்த வரையில் இடைவிடாது ஏற்றுங்கள். 48 நாட்கள் இந்த தீப வழிபாடு முடிவதற்குள்ளாகவே உங்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அன்னையை மனதார நம்பி வழிபடுபவர்களை ஒரு நாளும் அன்னை கை விடமாட்டார்.

இதையும் படிக்கலாமே: மனவேதனை நீங்க சிவ வழிபாடு

பார்க்க உக்கிர தெய்வமாக தோன்றினாலும் குழந்தை மனம் கொண்ட அன்னையை இந்த முறையில் நாம் வேண்டி நம்பிக்கையுடன் வணங்கும்போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -