இந்த 2 பூவை கையில் வைத்துக் கொண்டு இறைவனிடம் என்ன வேண்டினாலும் அது உடனே நடக்கும். நல்லதை நடக்கவிடாமல் தடுக்கும் கெட்ட தேவதைகள் உங்களை விட்டு தெறித்து ஓடும்.

thamarai
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதற்கு காரணம், நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்கு தெரியாத நல்ல தேவதைகளும், கெட்ட தேவதைகளும் தான். இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு இருந்தாலும், இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் ஆசீர்வாதம் இருந்தால் தான், நம்முடைய வேண்டுதல் பலிக்கும். நம்முடைய வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தேவதைகளை விட இறை சக்தி குறைவா? இறை சக்தியை விட தேவதைகளின் சக்தி அதிகமாக? என்ற ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம். இந்த பூமியில் நாம் பிறக்கும் போது, நம்முடனே இருந்து, நம்மை ஆசீர்வதித்து நமக்கான நல்லது கெட்டதை நம்முடனே இருந்து பார்த்துக் கொள்ளக்கூடிய வேலையை பிரபஞ்சமானது, இந்த எட்டுத்திக்கு தேவதைகளின் கையில்தான் கொடுத்துள்ளது.

நம்முடைய முன்னோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ‘வீட்டில் கெட்டதை பேசக்கூடாது. நல்லதை மட்டும் தான் பேச வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் நல்ல தேவதைகள் ததாஸ்து என்ற வார்த்தையை சொல்லும் போது நாம் பேசக்கூடிய வார்த்தைகள் சில சமயங்களில் அப்படியே பலித்து விடும் என்று’.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட நல்ல தேவதைகள் நம்மை சுற்றி இருக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு காரணம் என்ன? நாம் வேண்டக் கூடிய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றியும், இந்த நல்ல தேவதைகளை நம்முடனே வைத்துக்கொண்டு வேண்டிய வரங்களை உடனடியாகப் பெற கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள செய்யவேண்டிய ஒரு சுலபமான வழிபாட்டு முறையைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய கெட்ட நேரம், நம்முடைய கிரக நிலைகள், கஷ்டம் வரும்போது தானாகவே நம்மை சுற்றி இருக்கும் நல்ல தேவதைகளும், இறை சக்தியும் நம்மை விட்டு விலகி இருக்கும். அந்த சமயத்தில் தான் கெட்ட தேவதைகள் தானாக வந்து நம் அருகில் அமர்ந்து கொள்ளும். தாங்க முடியாத துயரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருப்போம். இப்படி மீள முடியாத துயரத்தில் நீங்கள் சிக்கியிருக்கும் சமயத்தில் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -

வெண்தாமரை, செந்தாமரை. இந்த இரண்டு பூக்களும் பூஜைக்கு நமக்கு கட்டாயம் தேவை. எப்படியாவது முன்கூட்டியே சொல்லி வைத்து கடையிலிருந்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்ய வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

இடது கையில் வெண்தாமரை. வலது கையில் செந்தாமரை. இந்த இரண்டு பூக்களை வைத்து கொண்டு உங்களுடைய கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு, ‘எட்டுத்திக்கு நல்ல தேவதைகளும் என்னுடனே இருந்து என் வாழ்க்கையே நல்லபடியாக வழிநடத்திச் செல்ல வேண்டும். நான் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும்.’ என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கையில் இந்த இரண்டு மலர்களை வைத்துக் கொண்டு நீங்கள் இறைவனிடம் எந்த வரத்தை கேட்டாலும் அந்த வரத்தினை கொடுத்துவிடுவான். நல்ல தேவதைகளையும் இறை சக்திகளையும் வசிய செய்யக் கூடிய சக்தி இந்த வெண்தாமரையிலும் செந்தாமரையிலும் அடங்கியுள்ளது. பூஜையை முடித்துவிட்டு இரண்டு பூக்களையும் வாடும் வரை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். வாடிய பின்பு பூக்களை அகற்றிவிடலாம். நம்பிக்கையோடு 3 வெள்ளிக்கிழமை இந்த பரிகார பூஜையை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நம்பமுடியாத நிறைய மாற்றங்கள் நடக்கும் என்ற கழுத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -