பர்ஸில் வைத்த பணம் எப்படி தான் காலியாகிறது என்றே தெரியவில்லையா? இந்த ஒரு பொருளை மட்டும் பர்ஸில் வைத்து பாருங்கள். தேவையற்ற வீண் விரயங்களை தவிர்த்து, பர்ஸ் நிறைய பணம் நிறைந்திருக்கும்.

money purse
- Advertisement -

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது எடுக்கக்கூடிய முக்கியமான பொருட்களில் பர்ஸும் ஒன்று. அதில் நாம் நம்முடைய பணத்தையும், ஏடிஎம் கார்டுகளையும், கிரெடிட் கார்டுகளையும் வைத்து உபயோகப்படுத்துவோம். அவ்வாறு பர்ஸில் எடுத்து செல்லும் பணமானது நாம் வீடு திரும்பும் பொழுது பல மடங்கு பெருகி இருந்தாலும் அல்லது அப்படியே இருந்தாலும் மனதில் ஒருவித மகிழ்ச்சி பிறக்கும். ஆனால் சில பேருக்கு பரிசில் வைத்த பணம் கண்ணிமைக்கும் நேரத்தில் காலியாகிவிட்டது என்ன செய்தோம் என்றே தெரியவில்லை என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த பொருளை பர்ஸில் வைத்தால் வீண்விரயம் தவிர்க்கப்படும் என்றும் பணத்தை பர்ஸில் தங்க வைக்கும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த காலத்தில் பர்ஸை திறந்து பார்த்தால் அதில் பணம் இருக்கிறதோ இல்லையோ நிறைய ஏடிஎம் கார்டுகள் இருக்கும். கிரெடிட் கார்டுகளும் இருக்கும். இது மணி பர்ஸா? அல்லது கார்டு பர்ஸா என்று கேட்கும் அளவிற்கு இருக்கும். கேட்டால் நவீன யுகம் காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பர்ஸில் நாம் எந்தளவுக்கு பணத்தை வைத்து புழங்குகிறோமோ அந்த அளவிற்கு பணம் நம்மிடம் சேரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அவ்வாறு சேரக்கூடிய பணம் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பாக நம்மிடம் உயர வேண்டும் என்றால் அதற்காக நாம் நம்முடைய பர்ஸில் ஒரு பொருளை வைக்க வேண்டும். அந்த பொருள் தான் பிளேடு. முக சவரன் செய்வதற்காக உபயோகப்படுத்தும் பிளேடு தான். புதிதாக ஒரு பிளேடை வாங்கி அதன் கவரைப் பிரிக்காமல் அப்படியே பர்ஸில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டாலே போதும். பர்ஸில் இருந்து பணம் வீண்விரயம் ஆவதை இந்த பிளேட் தவிர்த்து விடுகிறது. வீண்விரயம் தவிர்க்கப்பட்டாலேயே அந்த இடத்தில் பணம் தங்க ஆரம்பித்து விடும் அல்லவா?.

சரி. அவ்வாறு தங்கும் அந்த பணத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு நாம் மகாலட்சுமியின் அம்சம் கொண்ட பொருட்களை பர்ஸில் வைத்திருக்க வேண்டும். சுக்கிரனின் அம்சம் கொண்ட வெள்ளை நிற துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய ஏலக்காயை எடுத்து, அதன் தோலை சிறிதாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் சிறிது பச்சை கற்பூரமும், சிறிய துண்டு லவங்கப்பட்டையும், ஒரு கிராம்பையும் வைத்து சிறியதாக கட்டி நம் பர்ஸில் வைத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய பர்ஸிற்கு பணவரவு என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கடனாக கொடுத்த பணம் நகை அனைத்தையும் திரும்ப பெற ஞாயிற்றுக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படி வழிபட்டு வந்தாலே போதும். வாங்கியவர்களே உங்களைத் தேடி வந்து திருப்பித் தருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

மிகவும் எளிமையான இந்த பொருட்களை நம்முடைய பர்ஸில் நாமும் வைத்து வீண் விரயத்தை தவிர்த்து பணத்தை பணவரவை அதிகரித்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -