வேரிலிருந்து ஒரு நரை முடி கூட இனி முளைக்காது. வாரத்தில் இரண்டு நாள் இந்த தண்ணீரை ஊற்றி தலைக்கு குளித்தால்.

white-hair
- Advertisement -

தலையில் ஒரு நரை முடி எட்டிப் பார்க்க தொடங்கி விட்டால் போதும். வருடங்கள் கடந்து செல்வதற்கு முன்பாக தலைமுடி கடகடவென வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும். வெள்ளை முடி எப்போதுமே நம்முடைய வயதை கொஞ்சம் அதிகமாக காட்டும். சருமமும் உடல் அழகும், எவ்வளவு தான் இளமையாக இருந்தாலும் முடி வெள்ளையாக இருந்தால், அது அழகை முழுமை பெறச் செய்யாது. இளமையான தோற்றத்திற்கு முதலில் கருகரு முடியே காரணமாக இருக்கும். அதற்காக ஐம்பது அறுபது வயதை கடந்த பின்பும் கூட இளநரை வரக்கூடாது என்று எதிர்பார்ப்பது ரொம்ப ரொம்ப தவறு.

ரொம்பவும் சிறு வயதிலேயே உங்களுக்கு இளநரை வேறிலிருந்து வளர தொடங்கி விட்டதா நீங்கள் மூன்று மாதத்திற்கு இந்த ஒரு குறிப்பை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய முடி கருகருவென வளர தொடங்குவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. மிக மிக எளிமையான அழகு குறிப்பு தான். நிறைய செலவு செய்ய வேண்டாம். நிறைய நேரத்தையும் செலவழிக்க வேண்டாம். நேரத்தை கடத்தாமல் குறிப்பை சீக்கிரம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கருகரு முடிக்கு ஹேர் டானிக்:
இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு. டீ தூள் மற்றும் கருவேப்பிலை. ஏலக்காய் மற்றும் மசாலா பொருட்கள் எல்லாம் சேர்க்காத டீ தூளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எந்த பிராண்ட் டீத்தூள் ஆக இருந்தாலும் சரி. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதில், 1 ஸ்பூன் டீ தூள் போட்டுக் கொள்ளவும். ஒரு கைப்பிடி கருவாப்பிலையை பொடி பொடியாக நறுக்கி அதை இந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். மிதமான தீயில் இந்த தண்ணீர் 20 நிமிடம் கொட்டிக்கட்டும். 2 டம்ளர் தண்ணீர், 1 டம்ளர் தண்ணீராக சுண்டி வரும்.

இந்த தண்ணீரை உங்கள் வேர்க்கால்களில் படும்படி நன்றாக ஸ்பிரே செய்து விடுங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு. பிறகு அந்த ஈரம் உங்கள் தலையில் இருக்கும் போதே விரல்களை வேர்க்கால்களில் வைத்து லேசாக மசாஜ் செய்து தர வேண்டும். இப்படி விரல்களால் வேர் கால்களை மசாஜ் செய்யும்போது நகம் உங்களுடைய தலையில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெரிய பெரிய நகம் இருப்பவர்கள் தலையை சொரண்டி மசாஜ் செய்வது தவறு. (ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் கூட போதும்.)

- Advertisement -

தலையில் மசாஜ் செய்து முடித்து விட்டு 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் கழித்து மயில்டான ஷாம்பு போட்டு தலையை அலசி கொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, உங்களுடைய தலைமுடியில் நரை முடி வருவது குறையும். இருக்கக்கூடிய நரைமுடி கூட கருப்பாக மாறும். புதிய முடிகள் வெள்ளையாக வளராது. அது மட்டுமில்லாமல் கருவேப்பிலையில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து உங்கள் முடியில் இறங்கி முடியை வலுவாக வளரச் செய்யும். முடி உதிர்வு குறையும்.

இது தவிர உங்களுடைய சாப்பாட்டில் பச்சைபயிறு, நெல்லிக்காய், மோர், பாதாம் பருப்பு, முறுங்கை கீரை, கருவேப்பிலை, நிலக்கடலை, சிறிதளவு தேங்காய், கருப்பு எள்ளு, அளவான பசு நெய் என்று இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் கலந்து தினம் தினம் வகை வகையாக சாப்பிடும் போது உடலில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறைந்து, மெலனின் சத்து அதிகரித்து நரை முடி வருவது குறையும்.

இதையும் படிக்கலாமே: கொத்து கொத்தா முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொய்யா இலை. இதை மட்டும் செய்தாலே கருகரு முடியை கஷ்டப்படாமல் கையில் தொட்டு பார்க்கலாம்.

இவ்வளவு தாங்க. இதை நீங்கள் முயற்சி செய்தாலே போதும். நரைமுடி பிரச்சனையிலிருந்து வெளிவந்து விடலாம். இது தவிர சில பேருக்கு பரம்பரை நரைமுடி, பித்தம் அதிகரிப்பதால் நரை முடி இருந்தால் அதையெல்லாம் சரி செய்ய இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கும். உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகளில் ஆர்வம் இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -