72 தலைமுறை புண்ணியம் செய்தவர் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம்

kaali4
- Advertisement -

சக்தியின் அம்சமாக போற்றப்படும் காளி காலங்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள். அவளை முழு மனதோடு வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். கிடைப்பதற்கரிய செல்வங்களையும் புகழையும் தரவில்லை ஒரு சிறப்பான காளி மந்திரத்தை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

kaali

காளி மந்திரம்:

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரூம் ஹ்ரூம் ஸ்வாஹா||

- Advertisement -

மேலே உள்ள மந்திரமானது சாதாரண மந்திரம் அல்ல. 72 தலைமுறைகளாக தொடர்ந்து புண்ணியம் செய்த ஒருவராலேயே இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்க முடியும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

kaali

சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற பூக்களை அர்ச்சனைக்கு வைத்து, காளிக்கு சிகப்பு நிற மாலை அணிவித்து, தினமும் 108 முறை சிகப்பு நிற மணி கொண்டு இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக உலகத்தாரால் அரிது என்று சொல்லக்கூடிய பல செல்வங்கள் கிடைக்கும். அதோடு பேர் புகழ் என அனைத்தும் வந்து சேரும் என்று கூறுகிறது காளிகா புராணம்.

- Advertisement -

kaali

இதையும் படிக்கலாமே:
ஒவ்வொரு நாளும் ஏற்றம் பெற சொல்லவேண்டிய தமிழ் மந்திரம்

காளி மாதாவை மனதில் நிலை நிறுத்தி யவர் ஒருவர் இந்த மந்திரத்தை ஜபித்தாலும் அவர்களின் எதிரிகள் அழிந்து போவர். அறிவு கூர்மை அதிகரிக்கும், வாக்கு பலிக்கும். ஆனால் இந்த மந்திரத்தை எந்த ஒரு தீயவராலும், தீய வினை புரிவதற்காக தொடர்ந்து ஜபிக்கவே முடியாது அப்படியே மீறி ஜபித்தாலும் அதில் எந்த பயனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

காளி வழிபாடு பலன்
மனிதர்கள் நம் அனைவருக்குமே இந்த வாழ்வும், இந்த வாழ்வை நாம் வாழும் இந்த பூமியை உள்ளடக்கிய இப்பிரபஞ்சமும், ஒவ்வொரு தினமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நமக்கு பல அதிசயங்களை காட்டுகிறது. அதே நேரத்தில் பல புதிய விடயங்களை கற்று தருகின்றது. சாமானிய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு தான் இவை எல்லாம் ஆச்சர்யங்கள். தங்களின் தீவிர தவத்தால் இவை எல்லாவற்றிற்கும் விடைகளை தெரிந்து கொண்ட ரிஷிகளுக்கும், ஞானிகளுக்கு இவை அனைத்தும் அந்த இறைவனின் திருவிளையாடல்கள்.

kaali

இந்த உலகத்தில் உயிருள்ளவற்றில் அனைத்திலுமே ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் உண்டு. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. அது போலவே இயற்கையின் நீதியான பிறப்பும், இறப்பும் ஒன்று மற்றொன்றை ஈடுசெய்கிறது. அதில் இந்த இறப்பை வழங்குவது காலம் ஆகும். இந்த காலம் தான் காளி என்ற பெண் தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த காளி தேவியை வணங்குவதால் அவருக்கு எதன் மீதும் இருக்கும் பயம் விலகும், மேலும் வழிபடுபவர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் இந்த காளி வழிபாடு.

English Overview:
Here we have kaliamman mantra in Tamil. This is the very powerful mantra of Goddess Kali. There is a lot of procedure to chant this mantra. All are listed above.

- Advertisement -