இந்த பேஷியல் செய்த பிறகு உங்களை பார்ப்பவர்கள் எல்லாம் நிச்சயம் அசந்து தான் போவர்கள். பார்லர் சென்று பேஷியல் செய்தால் கூட இத்தனை பளிச்சின்று ஆக முடியாது? நீங்க ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க இனி பார்லர் பக்கம் போகவே மாட்டிங்க

- Advertisement -

வீட்டில் ஏதாவது விசேஷம் அல்லது ஏதாவது பங்ஷன் போக வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக நாம் பார்லர் சென்று அதிக செலவு செய்து முகத்தை அழகாக மாற்றிக் கொண்டாலும், அது அனைத்தும் கெமிக்கல் கலந்த கிரீம்களை கொண்டே செய்வதால் முகத்தில் கண்டிப்பாக அதன் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த முறையில் நீங்கள் பயன்படுத்தும் போது வீட்டில் உள்ள பொருட்களை நீங்கள் உபயோகப்படுத்துவது மட்டுமில்லாமல் உங்கள் முகத்திற்கும் எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது அது எப்படி என்று பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

முதலில் எந்த ஒரு பேக் போடுவதாக இருந்தாலும் முதலில் முகத்தை நன்றாக துடைத்த பிறகு தான் போட வேண்டும். அப்போது தான் நீங்கள் உபயோகிக்கும் எதுவும் நல்ல பலன் தரும். சரி இப்போது இந்த பேஷியல் எப்படி செய்வது என்று பார்ப்போமா.

- Advertisement -

அதற்கு முதலில் காய்ச்சாத பாலை எடுத்து உங்கள் முகத்தில் தேய்த்து முகத்தை நன்றாக துடைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு ஸ்க்ரப் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் பால், இரண்டையும் சேர்த்து குழைத்து உங்கள் முகத்தில் தேய்த்து ஸ்க்ரப் செய்து முகத்தை துடைத்து விடுங்கள். இதை தேய்த்த உடனே துடைத்து விடலாம்.

அதன் பிறகு பேஷியல் பேக் போடும் முன் கெட்டியான தயிர் ஒரு ஸ்பூன், பீட்ரூட் ஜூஸ், ஒரு ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து கொஞ்சம் மசாஜ் செய்த பிறகு முகத்தை துடைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கடைசியாக இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், ஒரு டீஸ்பூன் பால், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக குழைத்த பிறகு இதை உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் வரை இந்த பேக் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு உங்கள் முகத்தை துடைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வலுவில்லாமல் வேரோடு கொட்டும் முடிக்கு வலு சேர்த்து அடர்த்தியாக்க, தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை போட்டு காய்ச்சினாலே போதுமே! எதையும் தேடாதீங்க இதை மட்டும் பண்ணுங்க.

அவ்வளவு தான் பார்லர் சென்று பேஷியல் செய்தால் கூட இத்தனை பள பளப்பாக உங்கள் முகம் மாறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்த முறை நீங்கள் அடிக்கடி செய்தாலும் உங்கள் முகத்திற்கு எந்த பக்கம் விளைவும் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாது. ஆனால் இந்த முறைகளை மட்டும் ஒவ்வொன்றாக சரியாக செய்து கொள்ளுங்கள் போதும். உங்கள் முக அழகை பார்த்து நீங்களே அதிசயித்து போவீர்கள்.

- Advertisement -