தீராத்துயர் தீர, மீண்டும் வாழ்க்கையில் அடி மேல் அடி விழாமலிருக்க இந்த ஒரு மந்திரத்தை செவ்வாய்க்கிழமையில் 6 முறை உச்சரித்து பாருங்கள் வெற்றி மேல் வெற்றி குவியும்!

murugan-om
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்தால் அதனை அடுத்து என்ன செய்வது? என்றே தெரியாமல் திக்கு முக்காடிப் போய் நிற்பார்கள். ஒரு படிக்கட்டு மேலே ஏறினால் இரண்டு படிக்கட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும். இப்படி தொடர் சறுக்கல்களை சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள் மனதார முருகனை நினைத்து இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் தீராத துயர் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை எப்போது? எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி உண்டு. ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தால் அடிவயிற்றில் இருந்து உச்சந்தலை வரை அதிர்வுகள் உண்டாவதை நாம் உணர முடியும். இத்தகைய முருக மந்திரங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய இருந்த ஒரு மந்திரமும் ரொம்பவே சக்தி வாய்ந்தது. உங்களுடைய துரதிர்ஷ்டத்தை மாற்றி அதிர்ஷ்டத்தை கொண்டு வரக் கூடிய அற்புதமான ஆற்றல் படைத்த இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமையில் உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

முருக மந்திரம்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்,
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் மாலை வேளையில் முருகனுக்கு வாசனை நிறைந்த மல்லிகை மலர்களை சாற்றி முருகன் சிலை இருந்தால் அதற்கு தூய பசும்பால் அபிஷேகம் செய்து அலங்கரித்து பிரசாதமாக இனிப்புப் பண்டங்களை படைத்து மனதார முருகனை நினைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானை சரணடைந்து இந்த மந்திரத்தை 6 முறை உச்சரிக்க வேண்டும். ஆறு முறை தொடர்ந்து கண்களை மூடிக் கொண்டு மனதில் முருகனை நினைத்து தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். பின்னர் உங்களால் முடிந்த இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்யுங்கள்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செய்து வந்தால் நீங்கள் எவ்வளவு அவமானங்களை சந்தித்து இருந்தாலும், உங்களை உயரத்தில் கொண்டு போய் புகழ், அந்தஸ்து, பதவி, மதிப்பு, மரியாதை போன்றவற்றை அதிகரிக்க செய்து விடுவார் முருகன். முருகப்பெருமான் வரம் கொடுப்பதில் வல்லவராக இருக்கிறார். அவரை வேண்டினால் வேண்டிய வரம் வேண்டியபடி அப்படியே கிடைக்கும் என்கிற நம்பிக்கை நம் பக்தர்களிடையே உண்டு. முருக பக்தர்களுக்கு பெரும்பாலும் ஈகைப் பண்பு அதிகம் இருக்கும். ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடோடி சென்று உதவுபவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

பிறர் துயரத்தை தன் துயரமாக நினைப்பவர்களுக்கு பலவிதமான சோதனைகள் ஆண்டவன் கொடுத்தாலும், அவர்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை, எனவே மனம் தளர்ந்து விடாமல், சோர்ந்து போகாமல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று முருகனை நினைத்து நெய் தீபம் ஏற்றி இவ்வகையில் 6 முறை இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். உங்களுடைய இந்நிலை படிப்படியாக உயரத் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும், கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யுங்கள். அங்குள்ள முருகனுக்கு தேவையான உதவிகளை கோவிலுக்கு உங்களால் இயன்ற அளவிற்கு செய்யுங்கள். இப்படி செய்து வந்தால் குப்பையில் இருப்பவரும் விரைவில் கோபுரத்தில் சென்றமரலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -