தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடைய பரிகாரம்.

mahalashmi1
- Advertisement -

பத்து முறை முயற்சி செய்தால், ஒரு முறை வெற்றி கிடைப்பது சாதாரண மனிதர்களுக்கு. அதிவிரைவாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்கக் கூடாது. புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும். பிரபல்யமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பத்து முறை முயற்சி செய்தால், கட்டாயமாக எட்டு முறையாவது வெற்றி காண வேண்டும்.

அதற்கு நாம் வெற்றியை தேடி செல்லக்கூடாது. வெற்றியை நம் பக்கம் வர வைக்க வேண்டும். வெற்றியை நம் பின்னால் வரச் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது. விடா முயற்சி, அயராத உழைப்பு, தடைகளை கண்டு பயப்படாத குணம், இவைகள் எல்லாம் நமக்கு தேவை.

- Advertisement -

இதோடு சேர்ந்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைதான். இப்படி எவ்வளவு கஷ்டப்பட்டும் வெற்றியை என் பின்னால் வர வைக்க முடியவில்லை, அந்த அதிர்ஷ்டத்தை என் பக்கம் வர வைக்க என்ன வழி என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலனை தரும்.

முயற்சியில் வெற்றி பெற பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படும் சோழி. இது நாட்டு மருந்து கடைகளில் காசு கொடுத்தாலே உங்களுக்கு கிடைக்கும். வெள்ளை நிற சின்ன சின்ன சோழியாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஆறு சோழிகள் நமக்கு தேவை. இந்த சோழியோடு நாம் வைக்க வேண்டிய பொருள் 6 சின்ன கற்கண்டுகள்.

- Advertisement -

டைமண்ட் கற்கண்டுகளை இதற்கு பயன்படுத்தக் கூடாது. கட்டி கட்டியாக சீர்வரிசையில் கற்கண்டு வைப்பார்கள் அல்லவா. அந்த கற்கண்டு இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக ஒரு சிவப்பு துணியில் வைத்து, முடிச்சாக கட்டி பர்ஸில், ஹேண்ட் பேக்கில், பையில் எதில் வைத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் எடுக்கப் போகும் முயற்சிகள் ஒரு முறையிலேயே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

காரிய தடையை உடை தெரியக்கூடிய சக்தி இந்த இரண்டு பொருட்களுக்கு உண்டு. மகாலட்சுமி தேவி உங்களுடனே இருந்து தடைகளை தகர்த்தெறிவால். வெற்றி மேல் வெற்றியை உங்களுக்கு கொடுப்பாள். நீங்கள் செய்யும் முயற்சிகள் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்காது. கற்கண்டு போல இனிப்பான செய்தி மட்டும்தான் உங்கள் செவிகளில் எட்டும். இந்த இரண்டு பொருட்களுக்கும் அவ்வளவு பெரிய சக்தி இருக்குதுங்க.

- Advertisement -

வியாபாரம் செய்றீங்க. புதுப்புது ஆர்டர்கள் எடுக்கப் போவீங்க. 10 ஆர்டரில், 8 ஆர்டர்கள் ஒப்பந்தமாக அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது நீண்ட நாட்களாக ஒரு நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்று முயற்சி செய்திருப்பீர்கள். அதில் தடை வந்திருக்கலாம். நீண்ட நாட்களாக மாணவர்கள் இந்த கல்லூரியில் சீட்டு கிடைக்க முயற்சி செய்திருப்பார்கள்.

அது கிடைக்காமல் தடைபட்டு இருக்கும். அந்த கல்லூரியில் சீட்டு கிடைக்க வேண்டும் என்றால் இந்த இரண்டு பொருளை கையில் எடுத்துட்டு போங்க. நிச்சயம் அந்த கல்லூரியில் உங்களுக்கு சீட் டு கிடைக்கும். நீண்ட நாள் தொழில் தொடங்க பேங்கில் லோன் கேட்கிறீங்க. அவங்க கொடுக்கவே மாட்டேங்கிறாங்க.

இதையும் படிக்கலாமே: கெட்ட சக்தி வீட்டை நெருங்காமல் இருக்க பரிகாரம்

பத்துவாட்டி திரிய அடிச்சிட்டாங்க, அப்போ அந்த காரியத்தில் வெற்றி காண இந்த முடிச்சு உங்களுக்கு உதவியா இருக்கும். இப்படி உங்களுடைய நல்ல தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -