ஒரு கைப்பிடி கோதுமை இருந்தால் போதும். கோடான கோடி நன்மைகள் வெற்றிகள் உங்கள் பின்னால் வரத்தொடங்கும்.

surya-bhagavan2
- Advertisement -

நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும். அப்போது தான் மனநிறைவான வாழ்க்கை கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நமக்கு வரக்கூடிய வாய்ப்புகள் எல்லாம், நமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்றும் நினைப்போம். ஆனால் விதியின் பயனால் நம்மை தேடி வரும் 10 வாய்ப்புகளில் ஒன்று மட்டும் தான் நமக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் வரக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் நமக்கு பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது எப்படி? கிரகங்களினால் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பது எப்படி? சர்வமும் நமக்காக வசியம் ஆவது எப்படி?

நன்மைகளை மட்டும் நமக்கு தரக்கூடிய சுலபமான இரண்டு பரிகாரங்கள் உங்களுக்காக. முதலில் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வசீகரிக்கும் தோற்றத்துடன் இருக்கவேண்டும். போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இந்த உலகத்தில் நாம் ஜெயித்து முன்னிலையில் வர வேண்டும் என்றால் நம்முடைய பேச்சில் வசீகரம் தேவை. நம்முடைய முகத்தில் வசீகரம் தேவை. இயற்கையாகவே இது சில பேருக்கு அமைந்திருக்கும்.

- Advertisement -

இயற்கையாகவே வசீகரத் தோற்றத்தைப் பெறாதவர்கள் என்ன செய்வது. வாழ்க்கையில் ஒரு சில படி பின்தங்கி தான் இருக்க வேண்டும். வசீகரம் என்பது இங்கு அழகை மட்டும் குறிப்பது அல்ல. அழகுக்கும் மேலாக ஒரு தேஜஸ் நம்முடைய முகத்தில் இருக்க வேண்டும். சர்வமும் நமக்கு வசியம் ஆக வேண்டுமென்றால் நம்முடைய முகமும் பேச்சும் வசீகரிக்க வேண்டும் என்றால் காலையில் நாம் உச்சரிக்க வேண்டிய ஒரு வரி மந்திரம்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு ‘ஓம் சர்வ மோக வசீகரி’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இயற்கையாகவே உங்களிடம் வசீகரம் குறைவாக இருந்தால், வசீகர சக்தி அதிகரிக்கப்பட்டு வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்க இந்த மந்திரத்தை உச்சரியுங்க.வாய்ப்புகள் எல்லாம் உங்களுக்கு வெற்றியைத் தர கூடியதாக அமையும்.

- Advertisement -

இரண்டாவதாக நாம் எல்லா விஷயத்திலும் வெற்றி அடைய வேண்டுமென்றால், நல்ல வேலை கிடைத்து, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், அந்த சூரியபகவானின் ஆசிர்வாதம் நமக்கு தேவை. மற்ற கிரகங்களினால் எந்த பாதிப்பும் வராமல் இருக்க, காலையில் 6:00 மணிக்கு எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு சரியாக காலை 6:45 லிருந்து 7:00 மணிக்குள் சூரிய பகவானுக்கு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கையில் ஒரு பிடி அளவு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். கையில் கோதுமை இருந்தபடியே சூரியனைப் பார்த்து சூரிய பகவானை வணங்கி விட்டு, கையிலிருக்கும் கோதுமையை காக்கை குருவிகளுக்கு இறையாக வைத்துவிட வேண்டும்‌. இந்த ஒரு பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் வேலையில், வருமானத்தில் வரக்கூடிய பணத்தடை படிப்படியாக குறையத் தொடங்கும். வருமானம் உயரும். வெற்றி உங்கள் பக்கம் வர இந்த ஒரு பரிகாரம் போதும்.

- Advertisement -