இவருக்கு 8 வெற்றிலையை இப்படி மட்டும் செய்தால் போதும்! நலிந்த தொழில், வியாபாரம் விருத்தியடையும்! வருமானம் இரட்டிப்பாகும் தெரியுமா?

hanuman-vetrilai-cash
- Advertisement -

எல்லா சமயங்களிலும் நம்முடைய வருமானம் சீராக வந்து கொண்டிருப்பதில்லை. ஒரு சமயம் தலைதூக்கி வியாபாரம் செழித்து வந்தாலும், சில சமயங்களில் நலிவடைந்து போய்விடும். அதைப் போல புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு எல்லா சமயங்களிலும் அவர்கள் திட்டமிட்டது திட்டமிட்டபடி நடப்பது இல்லை. இப்படி தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானம் அதிகரிக்க, தொழில் செழிக்க செய்ய வேண்டிய மிக எளிய பரிகாரம் தான் இது. இந்த பரிகாரத்தை ஹனுமனுக்கு செய்ய வேண்டும்! அதை எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

hanuman-sivan

பொதுவாக ஹனுமனுக்கு செய்யும் பரிகாரங்களில் இந்த பரிகாரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த பரிகாரத்தை தொடர்ந்து குறிப்பிட்ட காலம் வரை கடைபிடித்து வருபவர்கள் உடைய வருமானமானது பன்மடங்கு உயரும். உங்களுக்கு தடையாக இருந்த அத்தனை தடைக்கற்களும் உடைக்கப்பட்டு உங்களுக்கு ஒரு நல்ல வழியை இறைவன் காண்பிப்பார். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களுக்கு நினைத்தது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அவ்வகையில் வெற்றிலை மாலை சாற்றுவது, வடை மாலை சாற்றுவது போன்ற பரிகாரங்களும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. அதில் வெற்றிலை மாலை சாற்றி வழிபடுபவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த வருமானம் ஈட்டக்கூடிய எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் அது உடனே நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களுடைய தீவிர நம்பிக்கை. இந்நிலையில் வெற்றிலை மாலை சாற்றி முறையாக வழிபடுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.

vetrilai

உங்கள் தொழில், வியாபாரம் செழிக்க, வருமானம் பெருக 8 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வெற்றிலை கூட நுனி மற்றும் காம்பு உடையாமல் இருக்க வேண்டும். முழு வெற்றிலைகளை தாம்பூலத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வெற்றியிலும் இரண்டிரண்டு கொட்டைப் பாக்குகளை வைத்து வாருங்கள். பின்னர் ஒவ்வொரு வெற்றிலையையும் மடித்துக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் பாக்கு வெளியே வராதவாறு பார்த்து மடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் எல்லா வெற்றிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இடைவெளி விட்டு மஞ்சள் நூல் கொண்டு பூ கட்டுவது போல கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு மாலையாக செய்து முடிச்சுப் போட்டுக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலை மாலையை அனுமன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சந்நிதியில் இருக்கும் ஹனுமனுக்கு சாற்றுங்கள். பின்னர் துளசி இலைகளால் அர்ச்சித்து, ஹனுமன் சாலிசா அல்லது ஸ்ரீ ராம தோத்திரங்களை வாசியுங்கள்.

vetrilai-malai-hanuman

இதே போல 21 வாரங்கள் செய்து வர வருமானம் சார்ந்த எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் அவை உடனடியாக தீர்ந்து விடும். இந்த பரிகாரத்தை தொழில் செய்யும் முதலாளிகள், வியாபாரம் செய்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள், உத்யோகத்தில் வருமானம் உயர நினைப்பவர்கள், பதவி உயர்வு வேண்டி காத்திருப்பவர்கள், கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் இருப்பவர்கள், பண ரீதியான வம்பு வழக்குகளில் வெற்றி காண நினைப்பவர்கள் ஆகியோர் முறையாக கடைபிடித்தால் நிச்சயம் சாதகமான பலன்களை பெறுவீர்கள். மேலும் ஹனுமானுடைய செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியாகும்.

- Advertisement -