பல தலைமுறைக்கு பஞ்சத்தை விரட்டி அடிக்கும் 11 வெற்றிலை. நிலை வாசல் படியில் வெற்றிலையை இப்படி கட்டினால், மகாலட்சுமி கடாட்சம் நிரந்தரமாக உங்கள் கை பிடியில்.

vetrilai-lakshmi
- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்தால் 100% மகாலட்சுமி நிச்சயமாக உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். வெறும் பதினோரு வெற்றிலையை வைத்து சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. மிக மிக எளிமையான பரிகாரம். பின் சொல்ல கூடிய குறிப்புகளை பின்பற்றி முறையாக இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வாழ்வில் நிச்சயமாக பஞ்சம் என்பதே இருக்காது. தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வரும் போது உங்களுடைய குடும்பத்தில் அடுத்தடுத்த தலைமுறைகள் கூட செல்வ செழிப்போடு வாழும் என்பது நம்பிக்கை. இப்படியும் ஒரு அற்புத சக்தி வாய்ந்த ஆன்மீகம் பரிகாரம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, செய்து நம்பிக்கை உள்ளவர்கள் பலன் பெறலாம்.

லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் வெற்றிலை பரிகாரம்:
வெற்றிலையை வைத்து செய்த பரிகாரங்கள் எல்லாமே வெற்றியை கொடுக்கக் கூடியதுதான். வியாழக்கிழமை அன்றே சுத்தமான கிழிசல் இல்லாத கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் 11 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலைகளை ஒரு மஞ்சள் நூலில் நேராக காம்புகளை மட்டும் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கட்டிய வெற்றிலைகளை தாம்பூல தட்டில் அப்படியே வட்டமாக வைத்து அதன் மேலே கொஞ்சம் சந்தனம், கொஞ்சம் குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். அலங்கரித்த இந்த தட்டை அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும். (மா இலை தோரணம் நிலை வாசலில் கட்ட, நூலில் கட்டுவோம் அல்லவா. அதேபோல தான் வெற்றிலையையும் நீளமாக தொடுத்துக் கொள்ள வேண்டும்.)

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இந்த வெற்றிலை மாலையை கட்டி, பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி சிறியதாக மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மாலை வரை இந்த தட்டு அப்படியே பூஜை அறையில் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மீண்டும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து தாம்பள தட்டில் வைத்திருக்கும் வெற்றிலை மாலையை அப்படியே உங்கள் நிலை வாசல் படியில் கட்டி விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். வழக்கம் போல தீபம் தூபம் கற்பூர ஆராதனை, ஒரு சிறிய பால் பாயாசம் நெய்வேதியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை தோறும் இப்படி வெற்றிலை மாலையை நிலை வாசலில் கட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்தால், வீடு சுபிட்சம் பெறும். வெற்றிலை மாலை வாடிய பிறகு நிலை வாசலில் இருந்து எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். ரொம்ப ரொம்ப நல்லதுங்க.

இதையும் படிக்கலாமே: சொந்த வீட்டில் வாழும் உங்களின் கனவு நிறைவேற வேண்டுமா? வாஸ்து பகவானுக்கு இதை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள். உங்களின் கனவு இல்லம் மிக விரைவில் கை கூடும்.

இந்த பரிகாரம் வீட்டிற்கு அத்தனை பாசிட்டிவ் வைப்ரேஷனை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கெட்டுப் போகவே போகாது. வாழ்வில் சந்தோஷம் பெருக சந்ததியினர் சந்தோஷமாக வாழ எளிமையான இந்த பரிகாரத்தை அனைவரும் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -