ஐந்து வெள்ளருக்கன் உங்க கையில் இருந்தா போதும் நீங்க நினைத்தயாவையாவும் உங்கள் வசம் ஆகும். வாழ்க்கையின் அனைத்து இன்னல்களும் தீர எளிமையான வெள்ளருக்கன் பரிகாரம்.

erukkan-poo-vinayagar
- Advertisement -

ஆதி கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான். நாம் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அந்த ஆலயங்களில் முதலில் நாம் வணங்கக் கூடிய தெய்வமாக இருப்பவர் விநாயகப் பெருமானே. அவரை வணங்கிய பிறகு தான் மற்ற தெய்வங்களை நாம் வணங்குவோம். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த செடியாக வெள்ளெருக்கு செடி இருக்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வெள்ளெருக்கு செடியின் மூலம் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் என்ன என்று தான் பார்க்கப் போகிறோம்.

எந்த ஒரு காரியத்தை நாம் தொடங்குவதாக இருந்தாலும் விநாயகரை மஞ்சளில் பிடித்து வைத்து, அவரை வணங்கிய பிறகு தொடங்குவோம். அதே போல் எந்த ஒரு யாகத்தை மேற்கொள்வதாக இருந்தாலும், முதலில் விநாயகருக்கு என்று ஒரு ஹோமத்தை செய்த பிறகே மற்றதை செய்வோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விநாயகருக்குரிய மிகவும் சிறப்பு மிகுந்த செடியாக கருதப்படுவது வெள்ளெருக்கு செடி.

- Advertisement -

நம் வீட்டில் ஏற்றக்கூடிய விளக்கில் வெள்ளெருக்கு செடியில் இருந்து வரக்கூடிய பாலை சிறிது சேர்த்து விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும். நாம் செய்யக்கூடிய காரியத்தில் எந்த தடைகளும் இன்றி நடைபெற 5 வெள்ளெருக்கு பூவை முச்சந்தியில் இருக்கும் விநாயகருக்கு சமர்ப்பித்து விட்டு சென்றால் நாம் செல்லும் காரியத்தில் நமக்கு வெற்றி கிட்டும். 5 வெள்ளிக்கிழமைகளில் சிறிது மஞ்சளை நீரில் கரைத்து வெள்ளெருக்கு செடியை சுற்றி ஊற்றி, 5 முறை அந்த செடியை வலம் வந்து வணங்கி வர அனைத்து தோஷங்களும் நீங்கும், தடைகளும் விலகும்.

வெள்ளெருக்கு செடியிலிருந்து தயாரிக்கப்படும் திரியை உபயோகப்படுத்தி நாம் விளக்கேற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். வெள்ளெருக்கு செடியில் இருந்து கிடைக்கக் கூடிய நாரில் விநாயகரின் மந்திரத்தை கூறியவாறு 21 முடிச்சுகள் போட்டு கையிலோ அல்லது கழுத்திலோ காப்பு போல கட்டுவதன் மூலம், அந்த காப்பு நமக்கு பாதுகாப்பு ரட்சையாக மாறி நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் பாதுகாக்கும்.

- Advertisement -

வெள்ளெருக்கு செடி சூரியனின் அம்சமாக கருதப்படுவதால், சிறப்பான வேலை அமைய வேண்டும் என்று நினைப்பவர்களும், தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் தங்கள் வீட்டில் ஈசானிய மூலையில் இந்த செடியை வளர்த்து வர சூரியனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து வேலையிலும், தொழிலிலும் சிறந்து விளங்குவோம். மேலும் தினமும் இந்த செடிக்கு சுத்தமான ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அதற்கு தூப, தீபம் காட்டி வர தொழிலிலும், வேலையிலும் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: வாரத்தில் ஒரு நாள் எலுமிச்சம் பழத்தை இப்படி சுற்றி போட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராது. நிம்மதியாக வாழலாம்.

பல அற்புதமான ஆற்றலை கொண்ட இந்த வெள்ளெருக்கு செடியை வளர்த்து, அதற்குரிய முறையான பரிகாரத்தை நாம் மேற்கொள்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து இன்னல்களில் இருந்தும் நாம் வெளிவரலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -