இந்த 1 பொருளை கோவிலுக்கு தானம் செய்தால் வீட்டில் சண்டை, சச்சரவுகளே வராது! என்ன பொருள் அது?

god-with-mirror1
- Advertisement -

ஒரு வீட்டில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் அங்கு நிம்மதி குறைகிறது. எப்போதாவது சண்டை போட்டால் பரவாயில்லை! சதா சண்டை என்றால் வாழ்க்கையே வெறுத்து விடும் அளவிற்கு மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட தொடங்கி விடும். மன உளைச்சலை கொடுக்கும் இந்த சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு எளிய பரிகாரங்கள் நிறைய உள்ளன. அந்த வகையில் இந்த ஒரு பொருளை கோவிலுக்கு நீங்கள் தானம் செய்தால் வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகள் குறையும் என்பது நம்பிக்கை. அப்படியான பரிகாரம் என்ன? என்பதை நாமும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

god-with-mirror

பல கோவில்களில் மூலவருக்கு பின்புறம் கண்ணாடி போன்ற அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த கண்ணாடிகள் பல பிம்பங்களை கொடுக்கும். அதே போல எதிர்ப்புறம் பெரிய அளவிலான கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு மூலவரை சரியாக பார்க்க முடியாவிட்டால், அந்த கண்ணாடியின் மூலம் அவர்கள் தரிசனம் செய்து பலன் பெறலாம் என்பதால் அவ்வாறு எதிரே கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள்.

- Advertisement -

அதே போல பல வழிபாடுகளில் கண்ணாடியை வைத்து வழிபடுவதையும் நாம் பார்த்திருப்போம். இப்படி கண்ணாடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆன்மீக ரீதியாக பெரும் பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். நம் முகம் பார்க்க கூடிய கண்ணாடி ஆனது சாதாரண கண்ணாடி அல்ல. நீங்கள் நல்லவை நினைத்தால் நல்லவையாகவும், கெட்டவை நினைத்தால் கெட்டயாகவும் பிரதிபலிக்கும் இந்த அற்புதப் பொருள் எல்லோருடைய வீடுகளிலும் நிச்சயம் இருக்க வேண்டும்.

mirror

இத்தகைய கண்ணாடியை கணவன், மனைவி இருவரும் படுக்கும் படுக்கை அறையில் இரவில் எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். இதனைத் திறந்து வைத்திருந்தால் கண்டிப்பாக கணவன், மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது சிறிய அளவிலான கண்ணாடி ஒன்றை வைத்து பூஜை செய்வது மிகுந்த நற்பலன்களை கொடுக்கக் கூடியது. கண்ணாடியில் குலதெய்வங்கள் மற்றும் பித்ருக்களின் பிம்பங்கள் நீங்கள் பூஜை செய்யும் பொழுது வந்து செல்வதாக ஐதீகம் உண்டு. எனவே இவர்களின் அருள் பெறுவதற்கு சிறிய அளவிலான கண்ணாடியை பூஜை அறையில் எப்போதும் வைத்திருப்பது அவசியமாகும்.

- Advertisement -

இத்தகைய மகத்துவங்கள் வாய்ந்த இந்த கண்ணாடியை நீங்கள் கோவிலுக்கு தானம் செய்தால் வீட்டில் இருக்கும் பாதி பிரச்சனைகள் தீர்வதாக நம்பிக்கை உண்டு. குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய அற்புத சக்தி பெற்ற இந்த கண்ணாடியை கோவில்களில் நீங்கள் கேட்டு தானமாக வாங்கிக் கொடுக்கலாம். முதலில் கோவிலுக்கு சென்று விசாரித்துக் கொள்ளுங்கள். கண்ணாடி தேவை உள்ள கோவில்களுக்கு நீங்கள் பெரிய அளவிலான அல்லது உங்களால் முடிந்த வகையில் கண்ணாடிகளை வாங்கி தானம் செய்யலாம்.

mirro

அப்படி கண்ணாடி தானம் செய்ய முடியாதவர்கள் கோவிலில் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வாளி, விளக்கு, நெய் போன்ற பொருட்களையும் தானமாக வாங்கிக் கொடுக்கலாம். கோவில்களுக்கு நீங்கள் செய்யும் சிறு தானமும், பெரிய அளவிலான புண்ணியத்தை சேர்க்க கூடிய அற்புத பரிகாரம் ஆகும் எனவே மனதில் கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கோவிலுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுங்கள். நிச்சயம் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.

- Advertisement -