குருவின் அருள் பெற

guru arul pera
- Advertisement -

குரு பார்க்கின் கோடி நன்மை என்று வாக்கை கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒருவருடைய ராசியில் குரு பின் ஆதிக்கம் நன்றாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் எட்ட முடியாத உயரங்களுக்கு எல்லாம் செல்வார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை தான். சிலர் திடீரென்று நல்ல படிப்பு பதவி என்று அந்தஸ்துடன் வாழக் கூடிய நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.

அப்படியானவர்களை நாம் பார்க்கும் போது அவர்களுக்கு குருதிசை ஆரம்பமாகி விட்டது என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அத்தகைய அற்புதமான பலன்களை தரக்கூடிய குருவின் அனுகிரகத்தை நாமும் எளிமையாக பெறுவது எப்படி என்பது தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

குருவின் அருளை பெற

வியாழக்கிழமை என்றாலே அது குருபகவானுக்கு உகந்த நாள் தான். ஆகையால் தான் வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்றைய தினம் குரு பகவானால் ஆலயத்திற்கு சென்று அவரை வணங்குவது தீபம் ஏற்றுவது வழிபாடு செய்வது எல்லாம் நல்ல பலனை நமக்கு பெற்று தரும்.

அதிலும் நாளைய தினம் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. நாளைய தினத்தில் காலையில் ஏகாதசி திதியும், இரவு வரை துவாதிசி திதியும் இரவுக்கு மேல் திரயோதசி திதியும் இணைந்துள்ளது. அதாவது ஒரே நாளில் மூன்று திதிகள் இணைந்து வருவது மிக மிக அற்புதமான பலன்களை தரக் கூடியதாக இருக்கும்.

- Advertisement -

அத்தகைய நாளில் நாளைய நாளுக்குரிய குரு பகவானே வணங்குவது மேலும் சிறப்பு. நாளைய தினத்தில் காலையிலே அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டைக்கடலை வாங்குங்கள். உங்களுடைய வசதிக்கேற்ப இதன் அளவை தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த கொண்டைக்கடலையை கொண்டு வந்து நன்றாக ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வேக வைத்து கொண்டைக்கடலையை உங்கள் வீட்டில் பூஜை அறையில் குரு பகவானே மனதார வேண்டிக் கொண்டு அவருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதில் முக்கியமான ஒன்று கொண்டைக்கடலையை சுண்டலாக தாளிக்கும் போது வெங்காயம் சேர்க்கக்கூடாது.

- Advertisement -

இப்படி வைத்து வணங்கிய இந்த கொண்டைக்கடலையை உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு தானமாக கொடுத்து நீங்களும் உண்ணுங்கள். ஒரு வேளை வீட்டின் அருகில் கொடுக்க முடியாது என்றால் அருகில் உள்ள ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று கொடுத்து விடுங்கள்.

நாளைய தினத்தில் நீங்கள் செய்யும் இந்த ஒரு காரியம் உங்கள் குடும்பத்தை மேலும் மேலும் செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும். அது மட்டுமின்றி நல்ல செய்திகளும் நல்லவைகளும் உங்கள் வேடி தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: தோஷங்கள் நீங்க தீப பரிகாரம்

இத்துடன் குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -