குருவின் அருள் பெற்ற இந்த பொருளை வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டி தொங்க விட்டால், வீட்டில் தங்கத்தை மூட்டை மூட்டையாக வாங்கி குவிக்க கூடிய அற்புதமான யோகத்தை பெறலாம்.

guru bhagavan gold purchase
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பொன் நகைக்கு ஆசைப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு தங்கத்தின் மீது அனைவருக்கும் ஒரு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் தான் இன்று பெருமளவு முதலீட்டை தங்கத்தின் மீது செய்கிறார்கள். இது தங்கம் வாங்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் பொருந்தும். இன்றும் ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். இப்படியானவர்களும் தங்கத்தை வாங்கி குவிக்க கூடிய யோகத்தை பெற இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த நகை, பணம் எல்லாமே நம்மிடம் அதிகமாக சேர வேண்டும் என்றால் முதற்கட்டமாக அதற்கான முயற்சி, உழைப்பு அனைத்தையும் நாம் கட்டாயம் செய்ய வேண்டும். இவை எல்லாம் செய்வதோடு மட்டும் அல்லாமல் தங்கம் அதிக அளவில் சேருவதற்கும், தக்க வைத்துக் கொள்வதற்கு யோகம் வேண்டும். இந்த யோகம் ஒரு சிலருக்கு மட்டுமே தானாக அமையும், எல்லோருக்கும் அப்படி அமையாது. அது அமைவதற்கான யோகத்தை பெறுவதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்பொழுது  பார்க்க போகிறோம்.

- Advertisement -

வீட்டில் தங்கம் சேர பரிகாரம்
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய நாள். குரு பார்க்கின் கோடி பலன் என்ற பழமொழியை அறியாதவர் யாரும் இலர். ஒருவருடைய வாழ்க்கையில் குரு பகவானின் பார்வை பரிபூரணமாக கிடைத்து விட்டால் அவர்கள் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது. இதுவும் அனைவரும் அறிந்ததே, அப்படியான குரு பகவானின் பார்வை நம் மீது விழ வைப்பதற்கான எளிய பரிகாரம் தான் இது.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு 9 குண்டு மஞ்சள் வேண்டும். இந்த மஞ்சளை வியாழக்கிழமை அன்றே வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த மஞ்சளை வைத்து கட்டுமளவிற்கு ஒரு மஞ்சள் நிற காட்டன் துணியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து குரு பகவானை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு மகாலட்சுமி தாயாரையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த துணியில் மஞ்சளை வைத்து மஞ்சள் நிற நூலால் முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதன் பிறகு இந்த மூட்டையை நீங்கள் குடியிருக்கும் வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டி தொங்கவிட வேண்டும். வடகிழக்கு மூலையானது குரு பகவானுக்குரிய இடமாக பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் குரு பகவானுக்குரிய கிழமையில் இந்த மஞ்சள் கிழங்கும், அவருக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிற துணி, வடகிழக்கு மூலை இப்படி அனைத்தும் அவரை ஈர்க்கும் வண்ணமாகவே இருப்பதால் அந்த இடத்தில் குரு பகவானின் அனுக்கிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்து தங்கம் வாங்கக் கூடிய யோகம் உருவாகும்.

இந்த மூட்டையை கட்டி விட்ட பிறகு நீங்கள் வீட்டில் பூஜை செய்யும் பொழுது கற்பூர தீபராதனை அல்லது சாம்பிராணி தூபமும் மட்டும் காட்டி வந்தால் கூட போதும். இந்த முடிச்சை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இந்த மூட்டை தங்கம் வாங்கும் யோகத்தை உங்களுக்கு பெற்றுத் தரும்.

இதையும் படிக்கலாமே: எப்போதும் அடிதடி சண்டை சச்சரவு என வெறுப்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட அன்னோன்யமாக மாற இந்த ஐந்து பவளமல்லி பூ இருந்தால் போதும்.

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை பின்பற்றி தங்கத்தை வாங்கி குவிக்க கூடிய யோகத்தை பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -