வெற்றியை தரும் ராம மந்திரம்

hanuman1
- Advertisement -

இன்று இருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் எல்லோருமே வெற்றியை தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த வெற்றி என்பது ஒருவருக்கே சொந்தமானது அல்ல. வெற்றி என்பது இன்று ஒருவருடத்தில் இருக்கும், நாளை இன்னொருவர் இடத்தில் சென்று விடும். ஆகவே வெற்றியை எதிர்பார்த்து மட்டுமே நாம் முயற்சிகளை எடுக்கக் கூடாது.

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று தான் நம்முடைய முன்னோர்களும் சொல்லி வைத்துள்ளார்கள். ஆகவே முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது ரொம்ப ரொம்ப தவறு. முயற்சிகளில் தோல்வி கிடைத்தாலும் வெற்றி கிடைத்தாலும் அது ஜெயித்ததற்கே சமம். முயற்சி செய்யாமல் வெறுமனே அமர்ந்து இருப்பவர்கள் தான் தோல்வியாளர்களாக கருதப்படுகிறார்கள்.

- Advertisement -

ஆகவே வெற்றியை சுலபமாக பெற வேண்டும் என்று நினைப்பதும் தவறு. அதேசமயம் வெற்றி மட்டுமே கிடைக்கணும், தோல்வி நம் பக்கம் வரவே கூடாது என்று நினைப்பதும் தவறு. பல தோல்விகளை கடந்த பிறகு வரக்கூடிய வெற்றி இருக்கு பாருங்க, அதில் தான் சந்தோஷம் அதிகம் இருக்கு.

சரிங்க இதெல்லாம் சரிதான். ஆனால் நேரமும் காலமும் நம்முடைய முயற்சிகளை தோற்கடிக்கின்றது. நம்முடைய கெட்ட நேரம் நம்மை வெற்றியடைய விடாமல் தடுக்கிறது. எத்தனை முறை முயற்சி செய்தாலும் தோல்வி அடையக் கூடியவர்கள் என்ன செய்வது. இறைவனை பாதங்களில் சரணடைவது தான் ஒரே வழி அல்லவா. நீங்கள் வெற்றி பெற உங்களது கிரக சூழ்நிலையும் கெட்ட நேரமும் ஒரு தடையாக இருக்கிறதா.

- Advertisement -

தொடர் தோல்விகளை தகர்த்தெறியக்கூடிய ஒரு ராம மந்திரத்தை இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனுமனை நினைத்து வாரம்தோறும் சனிக்கிழமையும் வியாழக்கிழமையும் இந்த ராம மந்திரத்தை சொல்லி வந்தால் உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும். தோல்வி உங்களை கண்டு துவண்டு போகும். அந்த மந்திரம் என்ன அதை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

சனிக்கிழமையும் வியாழக்கிழமையும் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு செல்லலாம். அனுமன் கோவில் இல்லை என்றால் வீட்டில் இருந்தபடியே விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அனுமனை மனதார நினைத்து 33 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். கோவிலுக்கு செல்பவர்களாக இருந்தால் அந்த கோவில் பிரகாரத்தில் அனுமனுக்கு முன்பாக அமர்ந்து 33 முறை பின் செல்லக்கூடிய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

வெற்றி தரும் ராம மந்திரம்

ஜெய் ராம், ராம் ராம்,
ஸ்ரீராம் ஜெய்ராம்
ஜெய ஜெய ராம்.

எளிமையான வார்த்தைகளில் உச்சரிக்க கூடிய சுலபமான மந்திரம் இது. வாரத்தில் இரண்டு நாள் சனிக்கிழமையும் வியாழக்கிழமையும் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு வெற்றி தேடி வரும். முடிந்தால் இதோடு 33 வெற்றிலைகளை மாலையாக கட்டி அனுமனுக்கு உங்கள் கையால் சாத்துங்கள். அனுமனுக்கு பிடித்த வெண்ணை ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு போய் நெய்வேதியம் செய்யுங்கள். உங்களுக்கு இருக்கும் துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்ட தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறும் ராசிக்காரர்கள்

அதேபோல சில விஷயங்களை தொடங்கும் போது சில இடங்களுக்கு போகும் போது, நம்மை அறியாமலையும் மனதில் ஒரு பயம் இருக்கும். அந்த மன பயத்தை போக்க அந்த இடத்தில் இருந்தபடியே மேல் சொன்ன மந்திரத்தை மனதிற்குள் சொன்னால், மன பயம் நீங்கி தைரியம் பிறக்கும். அடுத்தடுத்த தோல்வியை சந்தித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு, அடுத்தடுத்த வெற்றியை கொடுக்க இந்த மந்திரம் நிச்சயம் வழிகாட்டும், என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -