இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் அடுத்தடுத்த தோல்விகள் உங்களை நெருங்காது. எதிர்ப்புகளை கண்டு பயப்படாமல், வாழ்க்கையில் வெற்றி பெற, வெற்றி திலக பரிகாரம் உங்களுக்காக.

thilagam
- Advertisement -

இன்னைக்கு நாம பாக்க போற திலகம், வெற்றி திலகம். யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கையில் எந்த சறுக்களும் ஏற்படாமல் இருக்க, இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். அடுத்தடுத்த தோல்விகளில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால், தோல்வி தொலைதூரம் செல்லும். வெற்றி உங்கள் அருகிலேயே நிற்கும். சிலபேர் பார்ப்பதற்கு முகம் கலை இழந்து காணப்படுவார்கள். அவர்களுடைய முகம் வசீகரத் தோற்றத்தை இழந்து இருக்கும். அப்படிப்பட்டவர்களும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வந்தால் முகம் வசீகரம் அடையும்.

எல்லோருக்கும் பிடித்த மாதிரி உங்களுடைய முகம் மாறும். வெற்றி திலகமாகவும் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வசீகர திலகமாகவும் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வசீகரம் இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும். வெற்றி வந்துவிட்டால் உங்களுடைய முகத்தில் வசீகரம் நிரந்தரமாக தங்கும். இவை இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை தான். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த திலகத்தை எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வெற்றி திலகம் தயார் செய்யும் முறை:
இந்த திலகத்திற்கு நமக்கு மூன்று வாசனை நிறைந்த பொருட்கள் தேவை. கோரோசனை, ஜவ்வாது, அக்தர். இது மூன்றுமே இன்று சுலபமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. கொஞ்சம் தரமான பொருட்களாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் அந்த ஆண்டவனை நினைத்து குல தெய்வத்தை நினைத்து நாம் தொடங்கும் போது நமக்கு வெற்றி பல மடங்கு கிடைக்கும்.

ஏதாவது ஒரு நாள், நாள் கிழமை கணக்கு கிடையாது. ஆனால் அதிகாலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த திலகத்தை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு கோரோசனை, ஜவ்வாது, அக்தர், மூன்றையும் சேர்த்து கலந்து பூஜையறையில் வைத்து விடுங்கள். அதன் பின்பு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லி அந்த வாசனை திலகத்திற்கு உயிரோட்டம் கொடுங்கள். பிறகு அந்த டப்பாவை எடுத்து அதிலிருந்து கொஞ்சமாக திலகத்தை தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மூடி போட்டு மீண்டும் அந்த திலகத்தை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். தினமும் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது இந்த திலகத்தை இட்டுக் கொண்டால் உங்களுடைய காரிய தடை விலகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களை எதிர்மறை சக்திகள் அண்டாது. அதேசமயம் நீங்கள் வசீகரத் தோற்றத்தோடு மாறுவீர்கள். எல்லோருக்கும் பிடித்த மனிதராக மாறக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிட்டும். முகப்பொலிவு கூடும்.

இதையும் படிக்கலாமே: என்ன பரிகாரம் செய்தும் உங்கள் எண்ணம் ஈடேறவில்லையா? இந்த நட்சத்திர நாளில் இதை மட்டும் செய்தால் போதும் உங்கள் ஆசைகள் நிறைவேறும், துன்பங்கள் தூர விலகும்.

எத்தனை நாட்கள் வேண்டும் என்றாலும் தொடர்ந்து, உங்கள் ஆயுள் முழுவதும் கூட இந்த வசீகர திலகத்தை நீங்கள் பயன்படுத்தி வரலாம். கணவன் மனைவி நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கும் இதை நெற்றியில் வைத்து பள்ளிக்கூடம் அனுப்பலாம். தவறு கிடையாது. இந்த வாசத்திற்கு எதிர்மறை சக்திகள் கெட்ட சக்திகள் கூட குழந்தைகளை நெருங்காமல் பாதுகாப்புக்கு கவசமாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -