புதிதாக தொழில் தொடங்குபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

man vinayagar
- Advertisement -

ஒரு இடத்தில் நாம் வேலை செய்வதை விட கடினம் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கி அதில் முன்னுக்கு வருவது. அந்தத் தொழில் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரிய அளவிலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வியாபாரம் நன்றாக நடந்து அதில் முன்னேறும் வரை படாத பாடு பட வேண்டும்.

இந்த வியாபாரம் தொழில் இதற்கெல்லாம் மூலதனம் ஆட்கள் வர வேண்டும். அதன் மூலம் பணவரவு அதிகரிக்க வேண்டும். இன்றளவும் பல வியாபார தொழில் நிறுவனங்கள் தொடங்கிய நிலையிலேயே முடிந்து விடுகிறது. பாதி இருந்த இடமே தெரியாமல் போய் விடுகிறது. இதற்கு காரணம் அதில் முன்னேற்றம் இல்லாமல் போவதே.

- Advertisement -

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அல்லது ஏற்கனவே நடத்தும் தொழிலில் லாபம் இல்லாதவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போது லாபம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தொழில் துவங்க முன் செய்ய வேண்டியது

புதிதாக ஒரு வீடு கடையும் கட்டும் போது முதலில் அந்த இடத்திற்கு நுழையும் போது சுவாமி படங்களை தான் கொண்டு செல்வோம். அதிலும் மகாலட்சுமி தாயார் விநாயகர் இந்த இருவரையும் தான் முதலில் எடுத்து செல்வோம். இதற்கு காரணம் மகாலட்சுமி தாயார் செல்வ வளத்தை தருபவர். விநாயகர் கண் திருஷ்டி தீயவற்றையெல்லாம் அழித்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பவர்.

- Advertisement -

இப்போது இந்த இருவருரையும் வைத்து தான் இந்த பரிகாரத்தையும் செய்யப் போகிறோம். இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய கிண்ணம் தேவை. வெள்ளியிலான கிண்ணமாக இருந்தால் மிகவும் விசேஷம். முடியாதவர்கள் காப்பர் கிண்ணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் மகாலட்சுமி தாயார் விநாயகர் இந்த இருவரின் விக்கிரகங்களின் வாங்கிக் கொள்ளுங்கள். விக்ரகங்கள் நம்முடைய விரல் அளவு தான் இருக்க வேண்டும்.

அடுத்து இந்தக் கிண்ணம் முழுவதும் மல்லி விதைகளை நிரப்ப வேண்டும். அதன் மேல் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விநாயகர் சிலையும் மகாலட்சுமி தாயாரின் சிலையும் வைக்க வேண்டும். இதை கடையில் சுவாமி படங்கள் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது கல்லாப் பெட்டி இருக்கும் இடத்தில் வைக்கலாம். தொழில் நிறுவனமாக இருந்தால் நீங்கள் அமரும் மேஜையிலும் வைக்கலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த தெய்வங்கள் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். நீங்கள் தினமும் ஊதுபத்தி கற்பூரம் என எதைக் காட்டினாலும் முதலில் இவர்களுக்கு காட்டிய பிறகு தான் நீங்கள் பூஜை அறையில் உள்ள சுவாமிகளுக்கு காட்ட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வரும் போது வருமானம் பல மடங்கு பெருகுவதோடு கண் திருஷ்டி போன்றவை எல்லாம் அடியோடு நீங்கி விடும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரிய அளவில் முன்னுக்கு வரலாம்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

இந்த மல்லி விதைகளை 41 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விடுங்கள். இதை மாற்றும் போது கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிதாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதை முதன் முதலில் வைக்கும் போதும் மாற்றும் போதும் நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டியதில்லை நல்ல நேரத்தில் செய்தாலே போதும். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து உங்கள் தொழிலில் முன்னுக்கு வாருங்கள்.

- Advertisement -